தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
காந்தா பிரசாத் தம்பதியினர் அந்த பகுதியில் பிரபலம்.
அவர்களை குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் யூடியுப் சேனல் நடத்தும் கவுரவ் வாசன்.
அந்த வீடியோவில்… கொரோனா பிரச்சினை காரணமாக காந்தா பிரசாத் நடத்தி வரும் ஓட்டலுக்கு யாரும் யாரும் சாப்பிட வருவதில்லை. அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர் என வீடியோ பதிவிட்டார்.
இதனால் சில நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அந்த ஓட்டலில் சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வருமானம் கூடியது.
மேலும் நல்ல உள்ளங்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளிக்க தொடங்கினர்.
ஆனால் இந்த நிதியுதவியை கவுரவ் வாசன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன் வங்கி கணக்கில் ஏற்றிக் கொண்டார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தெரிந்துக் கொண்ட காந்தா பிரசாத் டெல்லி தெற்கு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து நிதியுதவி அளித்தவர்கள் கவுரவ் வாசனை கடுமையான திட்டத் தொடங்கினர்.
இந்த நிலையில் இந்த தகவல்கள் அறிந்துக் கொண்ட நடிகர் மாதவன் தன் ட்விட்டரில்…
பாபா கா தாபா உணவக உரிமையாளர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்களால் தான் மக்கள் நல்லது செய்ய முன்வர மறுக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அவர்களை ஏமாற்றிய அந்த மோசடிக்கார ஜோடி (கவுரவ் மற்றும் அவரது மனைவி) கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும். டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது”.
இவ்வாறு மாதவன் பதிவிட்டுள்ளார்.
Actor Madhavan reacts to Baba Ka Dhaba cheating allegation