இயக்குனர் படத்தை கைவிட ‘திடீர்’ இயக்குனரான நடிகர் கிஷோர்

இயக்குனர் படத்தை கைவிட ‘திடீர்’ இயக்குனரான நடிகர் கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kishore turns a director for Black and White movieதெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த கிஷோர் அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனையடுத்து பல படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆடுகளம், விசாரணை, ஹவுஸ் ஓனர், வெண்ணிலா கபடி குழு, வட சென்னை, றெக்க போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை சொல்லும்.

தற்போது ஒரு படத்தில் நடித்து வந்த இவர் தீடீரென இயக்குனராக மாறியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ராகவ் இயக்கத்தில் உருவான கதவ் என்ற படத்தில் நடித்து வந்தார் கிஷோர். நாயகியாக அனுபமா குமார் நடித்து வருகிறார்.

திடீரென சில காரணங்களால் இயக்குனர் ராகவ் படத்தை இயக்க முடியாமல் போக கிஷோரே இயக்குநராக மாறியிருக்கிறார்.

தற்போது இந்த படத்திற்கு புதிய பெயராக கருப்பு மற்றும் வெள்ளை என தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.

Actor Kishore turns a director for Black and White movie

கொரோனா சிகிச்சை பெறும் ரசிகரின் உடல்நலம் விசாரித்த சிம்பு

கொரோனா சிகிச்சை பெறும் ரசிகரின் உடல்நலம் விசாரித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu enquire about his fan who is affected by Coronaகொரோனா வைரஸ் பாதிப்பால் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பலர் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும் ஒரு சிலர் வழக்கம் போல தங்களை வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட STR நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் C.N.சிம்பு ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் தற்போது சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த நடிகர் சிம்பு உடனடியாக மன்ற நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

உடல் நலம், சிகிச்சை முறைகள் கேட்டு தைரியமாக இருக்கும்படி அறிவுரை சொன்னாராம்.

அவர் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார் சிம்பு.

நீங்க இல்லாம நான் இல்ல…. என்ற சிம்புவின் பாடலுக்கு சரியானவர் சிம்பு என்று சொன்னால் அது மிகையல்ல.

Simbu enquire about his fan who is affected by Corona

சசிகுமார் ரூ.25000 உதவி; கடனை திருப்பி கொடுப்பேன் என விவசாயி உறுதி

சசிகுமார் ரூ.25000 உதவி; கடனை திருப்பி கொடுப்பேன் என விவசாயி உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sasikumar help farmer but farmer says he will re payகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.

முக்கியமாக நமக்கு உணவிடும் விவசாயிகளின் வாழ்வதாரமே முற்றிலும் முடங்கியுள்ளது.

விவசாய மக்களுக்கு ஊரடங்கு கடுமையாக விதிக்கப்படாவிட்டாலும் உற்பத்தி செய்த பொருட்களை சரிவர விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் இணையத்தில் ஒரு வீடியாவை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் தன் வாழைத் தோட்டத்தின் வீடியோவை வெளியிட்டுருந்தார்.

அந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் பத்திரிகையாளரும், கத்துக்குட்டி பட இயக்குனருமான இரா.சரவணன் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

“வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன்.

தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்” எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இரா.சரவணனின் இந்த ட்வீட்டைப் பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான சசி குமார் உடனடியாக அந்த விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்துள்ளார்.

இதனால் மனம் நெகிழ்ந்த கோபாலகிருஷ்ணன், ‘சசி சார் உதவியா கொடுத்தாலும், அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்கு திருப்பிக் கொடுப்பேன்’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எதையுமே இலவசமாக பார்க்கும் மக்கள் மத்தியில் பெற்ற உதவியை கடனாக நினைத்து திருப்பி கொடுப்பேன் என்று கூறிய இந்த விவசாயி உயர்ந்து நிற்கிறார்.

Actor Sasikumar help farmer but farmer says he will re pay

https://twitter.com/erasaravanan/status/1258607551752671232

ரூட் மாறும் கோலிவுட்; மாதவனின் ‘மாறா’ படமும் ஆன்லைனில் ரிலீஸ்

ரூட் மாறும் கோலிவுட்; மாதவனின் ‘மாறா’ படமும் ஆன்லைனில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madhavans Maara movie plans to release in OTT platforms கொரோனா ஊரடங்கு… தியேட்டர்கள் மூடல்… வேலையிழப்பு… மக்களிடம் பணப்புழக்கம் குறைவு… பைனான்சியர் பிரச்சினை… உள்ளிட்ட பல காரணங்களால் ஆன்லைனில் படத்தை வெளியிட ஒரு சில தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள “பொன்மகள் வந்தாள்” படத்தை OTT ஆன்லைன் தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் சூர்யா.

இந்த நிலையில் நடிகர் மாதவன் நடித்துள்ள ‘மாறா’ படத்தின் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாம்.

இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இதில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே விக்ரம் வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ‘சார்லி’ திரைப்படத்தின் ரீமேக் தான் மாறா என கூறப்படுகிறது.

Madhavans Maara movie plans to release in OTT platforms

சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன்.; அருள்தாஸின் அதிரடி ஆஃபர்

சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன்.; அருள்தாஸின் அதிரடி ஆஃபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont want Salary till 2020 says Actor Aruldass கொரானா ஊரடங்கால் ஒட்டு மொத்த திரையுலகமே நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயக்குனர் ஹிரி, விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் அருள்தாஸ் தன் சார்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த கட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான ‘நான் மகான் அல்ல’ தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன்.

அதற்கு காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..!

வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்!

இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான்.

இந்த நேரத்தில் எனக்கு சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகம் முழுக்க ‘கோவிட்-19’ என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கி விட்டது.

ஆனாலும் நம் திரைத்துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை அனைவருக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

நானும் என்னைச் சுற்றி இருக்கும் நம் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும்.

அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது.

இது ஒரு நல்ல துவக்கம்! அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.

எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்கு பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..!

நன்றி

என்றும் உங்கள்,
அருள்தாஸ்
நடிகர்- ஒளிப்பதிவாளர்

I dont want Salary till 2020 says Actor Aruldass

BREAKING டீ கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி; காய்கறி-மளிகை கடை நேரம் நீடிப்பு

BREAKING டீ கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி; காய்கறி-மளிகை கடை நேரம் நீடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt given permission to open Tea stalls in lock downமே 17 வரை கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் ஒரு சில தளர்வுகளுடன் சிறு குறு வணிகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது.

இதனால் மே 4 முதல் சில வணிக நிறுவனங்கள் மாலை 5 மணி வரை செயல்பட துவங்கியது.

மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் நேற்று மே 8 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. ஆன்லைனில் சரக்குகளை விற்கலாம் என கோர்ட் உத்தரவிட்டது.

மது பானங்களுக்கு அனுமதி வழங்கிய அரசு டீ கடைகளை அனுமதிக்கவில்லை என்ற புகார் தமிழக முழுவதும் உருவானது.

இந்த நிலையில் தற்போது டீ கடைகள் திறக்கலாம் என உத்தரவு விட்டுள்ளது.

ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில்..

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்…

தமிழகத்தில் உள்ள டீ கடைகள் செயல்படலாம் என்றும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் டீ கடைகளில் அமர்ந்தோ, நின்றோ டீ குடிக்கக் கூடாது.

பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லலாம். மீறி அப்படி உட்கார்ந்து குடித்தால் உடனடியாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வரும் 11 ஆம் தேதி முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

TN Govt given permission to open Tea stalls in lock down

மேலும், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகைப்பொருட்கள், பால் உள்ளிட்ட கடைகளை காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை திறந்து கொள்ள அனுமதி*
*மற்ற தனிக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து கொள்ளலாம்*
*தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் இயங்கலாம், மற்ற பகுதிகளில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறந்து கொள்ளலாம்* 
*அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்*
*மே 11 திங்கள் கிழமை முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வருகிறது*

 

More Articles
Follows