தமிழ் தலைவாஸ் அணியின் தூதரானார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.

11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளன.

இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது.

இந்த அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், கேப்டனாக அஜய் தாகூரும் உள்ளனர். இந்த தொடரின் பரிசுத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டம் வரும் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள்” என்றார்.

இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெறுகிறது.

கமல்ஹாசன் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிக்பாஸில் ஓவியா திட்டிய வார்த்தையே பாடலானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற ஓவியா, ஒரு முறை மற்ற போட்டியளாரை பார்த்து ஷட்டப் பன்னுங்க என பேசினார்.

இது வார்த்தை படு பாப்புலராகி ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இந்த வார்த்தையை கொண்டு ஒரு புதிய பாடலை உருவாக்கியிருக்கிறார்களாம்.

ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் என்ற படத்தில்தான் இந்த பாடல் இடம்பெறுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல் ப்ரோமோ பாடல் என கூறப்படுகிறது.

நல்ல கணவராக இல்லாத கமல் எப்படி நல்ல தலைவராக முடியும்… ஓ.எஸ்.மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேசியதால், தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

கமலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமலுக்கு நடிக்கத் தெரியும் ஆனால் அரசியல் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

மேலும் மற்ற அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளதாவது…

“தன் மனைவிக்கு நல்ல கணவராக கமல் இல்லை. அவரின் பிள்ளைகளுக்கும் நல்ல தந்தையாக இல்லை.

மொத்த்த்தில் அவர் ஒரு நல்ல குடும்பஸ்தனாக இல்லை.

பின்பு அவர் எப்படி மக்களுக்கு நல்ல தலைவராக முடியும்.” என்று பேட்டியளித்துள்ளார்.

பாலுமகேந்திராவின் உதவியாளர் ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம்
ஜூலை 28-ல் வெளிவருகிறது.

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி.ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம்’.
இது மதுரை மண் சார்ந்த கதை.

படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல. அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை.

நாயகனாக தமன், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர், சிங்கம்புலி, திருமுருகன், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.
இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது,

” இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.

இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை, சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம்.

31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்.” என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

” தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான். இருந்தாலும், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு நாளும் அவர் வந்ததில்லை.

படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன். அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர். ” என்கிறார்.

இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி., இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம். எடிட்டிங் – எஸ்.சதிஷ் குமார், வசனம் கே.நந்தகுமார், கலை இயக்கம் – முத்துவேல், நடனம் -பாலாஜி, தினா, ராதிகா. ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.

படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

‘ புயலாய் கிளம்பி வர்றோம் ‘படம் ஜூலை 28-ல் வெளியாகிறது.

Balu Mahendra Asst Arumugam directed Puyalaai Kilambi Varom movie

 

தொழிலை மாற்றும் நிலையில் சிம்பு; ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு 3 வேடங்களில் நடித்து அண்மையில் வெளியான படம் ‘ஏஏஏ’.

இப்படம் ரசிகர்களின் கோபத்தை அதிகளவில் அள்ளியதால், பலரும் சிம்புவை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகையான கஸ்தூரி சிம்பு ரசிகர்களை சீண்டுமளவுக்கு ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.

‘தொழில் ரீதியாக சிம்பு மாற்றிக்கொள்ள வேண்டியது என்ன’ என அந்த ரசிகர் கஸ்தூரியிடம் கேட்க, “தொழிலையே மாத்தும்படி ஆவும் போல இருக்கு அவரு நிலைமை” என கஸ்தூரி பதிலளித்துள்ளார்.

Actress Kasthuris reply made Simbu fans angry

நாளை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதன் 3வது லுக் என்று வெளியாகும். அதில் விஜய்யின் கெட்டப் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நாளை இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இது 3வது லுக் பற்றிய தகவலா? அல்லது வேறு ஏதேனும் இருக்குமா? என ரசிகர்கள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

Mersal Team to make a special announcement on 21st July 2017

More Articles
Follows