தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எனவே அது பற்றி நாம் விரிவாக பாரக்க வேண்டிய அவசியமில்லை.
அண்மையில் நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியும் கமலும் அறிவித்துவிட்டனர்.
இவர்களைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் அவர்களும் முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர் நடிகர் பாக்யராஜ்.
எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தவர் பாக்யராஜ்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் திமுகவில் சேர்ந்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் கூறியதாவது..
“lநேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன்.
யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று தெரிவித்தார் பாக்யராஜ்.
Actor cum Director K Bhagyaraj entering into Politics soon