தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2019ல் நடைபெற்ற குடிமைப்பணி (UPSC) தேர்வு முடிவுகள் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியானது.
இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை (Lal Bahadur Shastri National Academy of Administration) பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.
இவர்களின் பயிற்சி காலம் முடிந்த பிறகு வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.
அதன்பின்னர் பல்வேறு அரசுத் துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வந்தனர்.
தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.
அதன்படி மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்தவர் ஸ்ருதன்ஜெய் நாராயணன். இவர் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார்.
இந்த நிலையில் அவர் திருப்பூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன்ஜெய் நாராயணன்.
இவர் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
2020-ல் வெளியான தேர்வு முடிவுகளில் 75-வது ரேங்க் பெற்றவராவார் ஸ்ருதன்ஜெய்.
Actor Chinni Jayanth son Sruthan Jai appointed as tirupur district sub collector