கஜா புயல் நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம்; தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajith contributes Rs 15 lakhs to Gaja cyclone reliefகஜா புயலால் பாதிப்படைந்த மக்களின் துயரங்களை நீக்க நிவாரண நிதிகளை பலரும் வாரி வழங்கி வருகின்றனர்.

தமிழக நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.

ஜிவி. பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் நேரடியாக களத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழக அரசும் ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் நிதியை ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது.

இதைத்தொடர்ந்து 2.0 பட தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்குமார் இதுவரை நிதி வழங்கவில்லை என பலரும் அவரை விமர்சித்தனர். தற்போது அரசு அறிவிப்பு வெளியான பின்னரே இது பலருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ajith contributes Rs 15 lakhs to Gaja cyclone relief

ajith contribution 15 lakhs to Gaja cyclone relief

அம்பரீஷ் மறைவு; நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக ரஜினி இரங்கல்

அம்பரீஷ் மறைவு; நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini condoles the passing away of Actor cum Former Minister Ambareeshகன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் அம்பரிஷ்.

தன்னுடைய முதல் படமான நாகரஹாவு என்ற படத்திலேயே தேசிய விருதை வென்றுள்ளார்.

மேலும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர் அம்பரீஷ்.

அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அம்பரிஷ் சற்றுமுன் காலமானார்.

அம்பரீஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்… “நல்ல மனிதநேயமுள்ளவரும், என் நெருங்கிய நண்பரான அம்பரீஷை இன்று இழந்து விட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rajini condoles the passing away of Actor cum Former Minister Ambareesh

சிவகார்த்திகேயன் படத்தலைப்பு *அசால்ட்*?; புகார் கூறும் பூபதிராஜா

சிவகார்த்திகேயன் படத்தலைப்பு *அசால்ட்*?; புகார் கூறும் பூபதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Sivakarthikeyan next movie titled Assaultசீமராஜாவை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

ஆனால் அசால்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பறந்தன. இதனையடுத்து ரசிகர்களும் போஸ்டர்களை டிசைன் செய்து வெளியிட்டனர்.

இந்த தலைப்பை தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை.

இந்நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி இயக்குனர் பூபதி ராஜா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் தற்போது இயக்குனராகி இருக்கிறேன். இதற்கு முன் டான்ஸ் மாஸ்டராக இருந்தேன்.

3 ஆண்டுகளுக்கு முன்பே அசால்ட் என்ற பெயரில் குறும்படம் இயக்கினேன். சிவகார்த்திகேயனும் அந்த படத்தை பார்த்தார்.

தற்போது அதை அசால்ட் குறும்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறேன்.

இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

படத்தின் தலைப்பை கூட 7 மாதங்களுக்கு முன்பே கில்டில் பதிவு செய்திருக்கிறோம்.

தற்போது அசால்ட் பெயரில் சிவகார்த்திகேயன் படம் உருவாகுவதாக தகவல்களை அறிந்தேன்.

ஆனால் அது படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்ற போதிலும் அவர்கள் மௌனம் காப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக கூறினால் நாங்கள் நிம்மதியாக இருப்போம்” என்றார்.

Did Sivakarthikeyan next movie titled Assault

sivakarthikeyans assault

எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு; விஷாலை எச்சரிக்கும் சிம்பு.?

எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு; விஷாலை எச்சரிக்கும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Simbus Enakka Red Card song lyrics warns Vishalஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிம்பு திருப்பித் தரவேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் மைக்கேல் ராயப்பன்.

இதன் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக பேசியவர் சிம்பு.

எனவே சிம்புவை பழி வாங்குகிறார் விஷால் என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்தி நடித்து வருகிறார் சிம்பு.

லைகா தயாரிக்கும் இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார்.

இப்படத்தில் “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என ஒரு பாடல் வரிகள் வருகின்றன.

இந்த பாடல்தான் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்த பாடல் விஷாலுக்கு சிம்பு தெரிவிக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Did Simbus Enakka Red Card song lyrics warns Vishal

*புலிமுருகன்* புகழ் ஆர்பி. பாலா *அனுநாகி* படத்தை தொடங்கினார்

*புலிமுருகன்* புகழ் ஆர்பி. பாலா *அனுநாகி* படத்தை தொடங்கினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pulimurugan dialogue writer RP Bala started his next movie Anunaagiமோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ பட வசனம் எழுதிய ஆர்.பி.பாலா ‘அகோரி’ என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து ‘அனுநாகி ‘ படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

“அனுநாகி” தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் ‘இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு , காதல் , அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் வகையில் படமாக்கவுள்ளனர்.

முக்கியமான நட்சத்திரங்கள் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் மூன்று வில்லன்கள் . மைம்கோபி, ரியாஸ்கான், தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான ‘காலா’ படப்புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

‘ராட்சசன் ‘பட வில்லன் சரவணன், ராஜா ‘ரங்குஸ்கி’ விஜயசத்யா, ஆதவ், ‘தொடரி ‘ராஜகோபால், ரியமிகா, சம்யுக்தா, ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் முக்கியமான நடிகர் ஒருவர் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து ‘அனுநாகி’ படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவு-விசாக் இசை – ஸ்ரீ சாஸ்தா எடிட்டிங் – பாசில் , ஸ்டண்ட் – டேஞ்சர் மணி, மற்றும் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பலரும் இப்படத்தில் பணி புரிகின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆர். பி.பாலா எழுத அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். D படத்தை இயக்குகிறார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது.

Pulimurugan dialogue writer RP Bala started his next movie Anunaagi

Anunaagi movie pooja

கஜா பாதிப்புக்கு 1 கோடி நிவாரண நிதி வழங்கினார் சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன்

கஜா பாதிப்புக்கு 1 கோடி நிவாரண நிதி வழங்கினார் சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saravana Stores Legend Saravanan contributes generously for Gaja Cyclone reliefகஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக நேற்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம்.

மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை.

மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.
தலைவர்
Legend சரவணன்

Saravana Stores Legend Saravanan contributes generously for Gaja Cyclone relief

 

More Articles
Follows