தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களின் துயரங்களை நீக்க நிவாரண நிதிகளை பலரும் வாரி வழங்கி வருகின்றனர்.
தமிழக நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.
ஜிவி. பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் நேரடியாக களத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
தமிழக அரசும் ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் நிதியை ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது.
இதைத்தொடர்ந்து 2.0 பட தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜித்குமார் இதுவரை நிதி வழங்கவில்லை என பலரும் அவரை விமர்சித்தனர். தற்போது அரசு அறிவிப்பு வெளியான பின்னரே இது பலருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Ajith contributes Rs 15 lakhs to Gaja cyclone relief