தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா எனும் குழுவை உருவாக்கியிருந்தனர்.
இந்த குழுவின் ஆலோசகராக ரிமோட் மூலம் குட்டி விமானங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார்.
நடிகர் அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் இந்த குழு மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது.
இதனிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது.
இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்ஷா குழு பங்கேற்றது.
இந்த அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.
இந்நிலையில் இந்த தக்ஷா அணியினர், தமிழக காவல் துறையுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னை தி.நகரை கண்காணிக்க உள்ளனர்.
தீபாவளிக்கு துணி வகைகள் வாங்க மக்கள் தி.நகரில் அதிகம் கூடுவதால் இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.