விவசாயிகளின் விடுதலைக்காக போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அபிசரவணன்

விவசாயிகளின் விடுதலைக்காக போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan helping Tamilnadu farmers at Delhi protestநம்நாடு சுதந்திரம் பெற்று, 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதே வேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு விடியலை தேடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தலைநகர் டில்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள் நம் தமிழக விவசாயிகள்.

அரை நிர்வாண கோலத்தில் மத்திய அரசின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் விதமாக இந்த போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர் விவசாயிகள்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி டில்லியில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை, சந்திக்க சென்றிருந்த அபி சரவணன், அங்கு விவசாயிகள் கைது செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக நமது விவசாயிகளுக்கு சட்ட உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் ராஜா ராம் மற்றும் ரீகன் அவர்கள் அலுவலகம் சென்று அவர்களை அழைத்து கொண்டு பார்லிமெண்ட் போலீஸ் நிலையம் சென்றார்.

பின்னர் விவசாயிகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிந்த பிறகு அன்று இரவு முழுவதும் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே இருந்து கொண்டு மறுநாள் நண்பகல் 12 மணி அளவில் விவசாயிகள் அனைவரும் விடுதலை ஆகும் வரை காத்திருந்து அவர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு வெண்ணிற ஆடைகளை வழங்கி அவற்றை உடுத்தச்செய்து, அவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார் நடிகர் அபிசரவணன்.

நடிகர் அபிசரவணன் தனது நண்பர்கள் மூலம் திரட்டிய நிதியை கொண்டு, கடந்த 31 நாட்களாக டில்லியில் ‘கிடைத்த’ உணவுகளை மட்டுமே உண்டு வந்த விவசாயிகளுக்கு, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ முறைப்படி சமைத்த அசைவ உணவுகளை வாழை இலை வைத்து அன்றைய 3 வேளைகளுக்கும் வழங்கி விட்டு வந்துள்ளார்.
விவசாயிகள் அபிசரவணனை மனதார பாராட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரும் கடந்த 4 நாட்களாக நண்பர்களின் உதவியுடன் டில்லி விவசாயிகளுக்கு உணவளித்து வருகிறார் அபி சரவணன். அதில் ஒரு நாள் உணவை கவிஞர் தாமரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அபிசரவணன், இதற்கு முன் டில்லியில் இவர்கள் முதற்கட்ட போராட்டம் நடத்தியபோதும் அவர்களுடனேயே தங்கி அந்த போராட்டத்தில் சில நாட்கள் கலந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார் அதை தொடர்ந்து வந்த நாட்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலருக்கு தன் கையிலிருந்தும் திரையுலகினர் மூலமாகவும் அவ்வப்போது உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Abi Saravanan helping Tamilnadu farmers at Delhi protest

Abi Saravanan TN farmers

விஐபி2-ஐ திருட்டுத்தனமாக பார்த்தவரை போட்டுக் கொடுத்த வரலட்சுமி

விஐபி2-ஐ திருட்டுத்தனமாக பார்த்தவரை போட்டுக் கொடுத்த வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi tweet about VIP2 piracyகடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியானது.

இப்படம் இன்றுவரை வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வரலட்சுமியின் கேரவன் டிரைவர் திருட்டுத்தனமாக ‘விஐபி2’ படத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளதாவது..

இப்போது தான் எனது கேரவன் ஓட்டுநர் கள்ளத்தனமாக ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

கோபம் வந்து திட்டித் தீர்த்தேன். சினிமாவினால் லாபம் அடைபவர்களே இப்படி நடந்து கொண்டால் மற்றவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். பைரசியை நிறுத்துங்கள்.

இவ்வாறு வரலெட்சுமி பதிவிட்டுள்ளார்.

varu sarathkumar‏Verified account @varusarath
Jus caught my caravan driver watchin VIP2 online..blasted him..if ppl who make a living from films do this,jus imagine the rest #Stoppiracy

ரிலீசுக்கு முன்பே ரூ. 120 கோடியை அள்ளியது விவேகம்

ரிலீசுக்கு முன்பே ரூ. 120 கோடியை அள்ளியது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam Pre release rs 120 crores businessஇன்னும் ஓரிரு தினங்களில் (ஆக.24) அஜித் நடித்துள்ள விவேகம் படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படம் ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் மட்டும் தற்போது வரை ரூ. 120கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் மட்டும் ரூ. 53 கோடி வரை தியேட்டர் உரிமை வியாபாரம் ஆகியுள்ளது.

கர்நாடகத்தில் ரூ. 5 கோடியும், கேரளாவில் ரூ. 4.5 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 4.5 கோடிக்கும் வியாபாரம் ஆகியுள்ளதாம்.

இதுதவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களை சேர்த்து 1 கோடிக்கும்,
வெளிநாட்டு தியேட்டர் உரிமை ரூ. 19 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ. 23 கோடிக்கும் பாடல் உரிமை ரூ. 2.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

Vivegam Pre release rs 120 crores business

இதர விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Area Price
Chennai Rs 5.1 crore
Chengalpet Rs 11.1 crore
North and Arcot Rs 5.9 crore
Coimbatore Rs 9.6 crore
Madurai Rs 6.9 crore
Trichy-Thanjavur Rs 6.1 crore
Salem Rs 5 crore
Tirunelveli-Kanyakumari Rs 3 crore
Tamil Nadu Total Rs 52.7 crore
Karnataka Rs 5 crore
Kerala Rs 4.5 crore
AP/Nizam Rs 4.5 crore
Rest of India Rs 80 lakh
Overseas Rs 18 crore
Worldwide Theatrical Rights Rs 85.5 crore
Satellite Rights Rs 23 crore
Hindi Rs 8 crore
Music Rs 2.5 crore
Worldwide Total Pre-Release Business Rs 119 crore

மூன்று கனவுகளை நிறைவேற்ற அரசியலில் இறங்கும் ரஜினி

மூன்று கனவுகளை நிறைவேற்ற அரசியலில் இறங்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini entering in politics to make 3 dreams trueகாந்திய மக்கள் இயக்கம் சார்பாக திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தினார் தமிழருவி மணியன்.

மாநாட்டிற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ. கணேசன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் வி. சந்திரன் மற்றும் நடிகர் ஜீவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது தமிழருவி மணியன் பேசியதாவது…

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியபோதுதான் என் பார்வை அவர் மீது திரும்பியது.

அதன்பின்னர் ஒரு முறை என்னை சந்திக்க விரும்பிய அவர் என் வீட்டிற்கு வரவா? அல்லது நீங்கள் வருகிறீர்களா? எனக் கேட்டார்.

ஒரு பக்குவப்பட்ட ஆன்மிகவாதியால்தான் இப்படி பேச முடியும். நான் அவரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தேன்.

அவரை சந்தித்த உடன் முதலில் நான் அவரிடம் கேட்டது…. 20 வருடங்களாக அரசியலைப் பற்றி பேசுகிறீர்கள். அரசியலுக்கு வருவீர்களா? எனக் கேட்டேன்.

அரசியலுக்கு வருவதை பற்றி முடிவு செய்துவிட்டேன். கடவுள் சொல்லிவிட்டார் என்றார்.

அரசியலுக்கு அவர் வர 3 கனவுகள் பற்றி சொன்னார்.

இன்னும் 10 ஆண்டுகளில் நதிகளை இணைக்க வேண்டும். அது நிச்சயம் ஒரு மாநில அரசால் செய்ய முடியாது. மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுடன் என் செல்வாக்கை பயன்படுத்தி பேசுவேன்.

காமராஜர் மற்றும் அண்ணா இருவரும் என் ரோல் மாடல்கள். மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்களை போலவே ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன்.

முக்கியமாக தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வெளிப்படையான ஆட்சியை கொடுப்பேன் என்றார்.

இதுதான் அவரின் 3 கனவுகள். அதுநாள் வரை நான் அவரை ஒரு நடிகராகதான் பார்த்தேன். ஆனால் அவர் சிறந்த மனிதர் என்பதை அவர் பேச பேச உணர்ந்தேன்.

அப்படி நல்ல உள்ளம் படைத்த மனிதர் ரஜினிகாந்த் முதல்வர் நாற்காலியில்அமர வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தமிழருவி மணியன் பேசினார்.

Rajini entering in politics to make 3 dreams true

tamilaruvi maninan actor jeeva at trichy rajini

தமிழன் தலையில் குல்லா; போதுமா? வேண்டுமா..? கமல் கேள்வி

தமிழன் தலையில் குல்லா; போதுமா? வேண்டுமா..? கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassanகமலையும் சினிமாவையும் எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ? அதுபோல் அவரையும் ட்விட்டரையும் இனி பிரித்துப் பார்க்க முடியாது என்ற நிலை வந்துவிடும் போல.

தினம் ஒரு ட்விட்டர் பதிவை போட்டு தமிழக அரசியல் பரபரப்பை கூட்டி வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் ட்விட்டர் ஒரு பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் பதிவு இதோ…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 5m5 minutes ago
காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.

அதிமுகவின் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் தற்போது இணைகின்ற வேளையில் கமல் இப்படி பேசியிருப்பது இன்னும் பரபரப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம்.

Kamalhassan tweet about Tamil Kulla

தன் படத் தலைப்பை வைத்தே மெர்சல் மேடையில் விஜய் பன்ச்

தன் படத் தலைப்பை வைத்தே மெர்சல் மேடையில் விஜய் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayஏஆர். ரஹ்மான் இசையில் அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் இப்பட நாயகன் நடிகர் விஜய் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது….

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 25வது ஆண்டில் அவருடன் பணியாற்றியதை விசேஷமாக உணர்கிறேன்.

உலகத்துக்கே மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி மெர்சல் ஆக்குனாரு. இப்போ ‘மெர்சல்’க்கு மெட்டு போட்டிருக்காரு.

நான் அட்லீயின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய விசறி. அது வேற லெவல். தெறிக்கு முதலில் அவருக்கு நன்றி.

ரசிகர்களுக்கு நான் அட்வைஸ் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.

எதிர்மறையாக யாராவது பேசுவதைப் பற்றிச் சொன்னால் அவர்களை புறக்கணித்துவிடு நண்பா என்றுதான் சொல்வேன்.

ஹிட்-ஃப்ளாப் எல்லாம் கொடுத்திட்டீங்க. ஆனா அதை விட அதிகமாக சம்பாதித்தது ரசிகர்களான உங்களைத்தான்.

எதுவும் இல்லாத போது உங்கள் தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையும் தான் முக்கியம்.

எல்லோரும் நம்மை சீண்டுவார்கள். அதெல்லாம் நடக்கும். ஆனால் அதை புறக்கணியுங்கள்.

என் மகன் கூட நான் சொல்வதை எல்லாம் கேட்கமாட்டார். எனவே நீங்கள் முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விடுங்கள்.

துப்பாக்கின்னா தோட்டா இருக்கனும்; கத்தினா ஷார்ப்பா இருக்கனும்.

தெறின்னா தெனாவட்டா இருக்கனும். மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கனும் என்று பேசினார் தளபதி விஜய்.

Vijay emotional and advice speech at Mersal audio launch

mersal audio launched

More Articles
Follows