மாறுவோம் மாற்றுவோம்; சீனாவை வீழ்த்தி ஆரி செய்த கின்னஸ் சாதனை

மாறுவோம் மாற்றுவோம்; சீனாவை வீழ்த்தி ஆரி செய்த கின்னஸ் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor AAri made Guinness World Records by his Maaruvom Maatruvomஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு, திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது.

இதில் சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ஜே.பி.ஆர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார்.

மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வு 2017 பேரை கொண்டு சீனா நடத்திய கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் சேர்ந்து நடத்தியது.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் கின்னஸ் சாதனை பெறவேண்டும் என்பது மட்டும் இல்லாமல், விவசாயத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக அமைந்தது.

Actor AAri made Guinness World Records by his Maaruvom Maatruvom

ஓணம் ரிலீஸில் நிவின்பாலியின் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா

ஓணம் ரிலீஸில் நிவின்பாலியின் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Paulys Njandukalude Nattil Oridavela on Onam 2017 releaseபிரேமம் படத்தில் நண்பர்களாகவே வாழ்ந்த நிவின் பாலியும் அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ள ‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா’ இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படம் வரும் ஓணம் பண்டிகை வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

கேரளாவை தாண்டியும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் நிவின் பாலியே இப்படத்தை தயாரித்துள்ளார்.

பெரும் வெற்றி பெற்ற ‘ஆக்ஷன் பிஜு’ படத்திற்கு பிறகு இவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

இப்படத்தின் டீசரும், ‘எந்தாவூ’ பாடலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். முன்னாள் பிரபல நடிகை ஷாந்தி கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் நடிப்பில் மீண்டும் பலவருடங்கள் கழித்து களமிறங்கியுள்ளார்.

இவரின் வருகையாலும் ‘ப்ரேமம்’ நடிகர்களின் கூட்டணியாலும் இந்த ஜனரஞ்சகமான குடும்பப்படம் அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Nivin Paulys Njandukalude Nattil Oridavela on Onam 2017 release

onam release

பாகுபலி2-க்கு அடுத்த இடத்தை பிடித்த விவேகம்

பாகுபலி2-க்கு அடுத்த இடத்தை பிடித்த விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubali 2 vivegamஅஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் வசூலில் மோசம் இல்லை என தியேட்டர்கள் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையை சேர்ந்த ரோகினி தியேட்டர் நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

அதில்… இந்த 2017ஆம் ஆண்டில் பாகுபலி2 படத்திற்கு பிறகு எங்கள் தியேட்டரில் அதிக வசூல் செய்த படம் விவேகம்தான் என பதிவிட்டுள்ளனர்.

Nikilesh Surya‏ @NikileshSurya
#Vivegam now 2017’s second highest grosser as well as footfalls @RohiniSilverScr #ThalaRage

Vivegam is 2nd highest grosser after Baahubali2

விஜய்சேதுபதியுடன் சமந்தாவுக்கு முதன்முறை; காயத்ரிக்கு 6வது முறை

விஜய்சேதுபதியுடன் சமந்தாவுக்கு முதன்முறை; காயத்ரிக்கு 6வது முறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi samantha gayathrie‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து அநீதிக் கதைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா.

இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒரு நல்ல கதையில் நடிப்பதால், இதில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறார்களாம்.

இந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க காயத்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் 5 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் சமந்தா நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

Gayathiri teams up with Vijay Sethupathi for sixth time in Aneethi Kathaigal

2வது முறையாக மோதும் விஜய்-கார்த்தி; அதே மேஜிக் நடக்குமா.?

2வது முறையாக மோதும் விஜய்-கார்த்தி; அதே மேஜிக் நடக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal and Theeran Adhigaram Ondru clash on Diwali 2017அட்லி இயக்கி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகிறது.

இதே நாளில் இந்த படத்துடன் 3 படங்கள் வெளியாகும் என இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

1) கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம்
2) சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம்
3) அர்ஜீன் இயக்கி தயாரித்து அவரது மகள் நடித்துள்ள சொல்லிவிடவா

இந்நிலையில் இதே நாளில் சதுரங்கவேட்டை புகழ் வினோத் இயக்கி, கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஜய்யின் காவலன் மற்றும் கார்த்தியின் சிறுத்தை படங்கள் வெளியானது.

இவை இரண்டும் வெற்றிப்பெற்றது. அதே போன்ற வெற்றி மேஜிக் இந்தாண்டும் நடந்தால் சந்தோஷம்தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.

Mersal and Theeran Adhigaram Ondru clash on Diwali 2017

விவேகம் கதையை திருடியவர் மன்னிப்பு கேட்கனும்; அஜித்துக்காக பார்க்கிறேன்… – ரவீந்திரன் சந்திரசேகரன்

விவேகம் கதையை திருடியவர் மன்னிப்பு கேட்கனும்; அஜித்துக்காக பார்க்கிறேன்… – ரவீந்திரன் சந்திரசேகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Vivegam story theft Producer Ravindran Chandrasekar complaintசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் ‘விவேகம்’ கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

என் படம் ’ஐ-நா’-வின் அடிப்படைக் கதையே ’விவேகம்’ படத்தின் கதை. என் படம் 2013ல் எழுதப்பட்டது. இந்த கதையை அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.

அவரிடம் ஒரு கதை வடிவமும் தந்தேன். அஜித் குமாரை சந்திக்க வைக்கிறேன் என 3 வாரம் எடுத்துக் கொண்டார். பின்னர் வந்து அஜித் புதுமுக இயக்குநருடன் கதையில் நடிக்க மாட்டார் என சொல்லிவிட்டார்.

நான் ’விவேகம்’ படம் பார்த்த போது நான் சொன்னதில் 60 சதவீதம் திரையில் இருந்தது. திரைக்கதையில் சில ஒற்றுமைகள் இருந்தன. இதற்கும், இயக்குநர் சிவா மற்றும் அஜித்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது நான் உறுதியாகக் கூறுகிறேன்.

ஏனென்றால் அவர்களை நான் இதுவரை சந்திக்கவில்லை. எனவே இந்தக் கதையை திருடியது அஜித்குமாரின் நெருங்கிய நண்பரே. அவர் அப்போது என்னை அலையவிட்டு, ’விவேகம்’ படம் பார்க்கும்போது அழவும்விட்டார்.

படம் ஆரம்பிக்கும் முன்னர் படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்ற எழுத்துகள் வரும். நம்பமுடியவில்லை.

நான் எனது கதையை பல ஆராய்ச்சிக்குப் பின், நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். அதை அஜித்துக்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். ’ஐ-நா’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளுக்கே 1.5 வருடங்கள் ஆகும்.

இந்தக் கதையை பல பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்கள் படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு இந்த அறிவுத் திருட்டைப் பற்றி கேட்டார்கள்.

ஒரு இயக்குநர், உதவி இயக்குநரின் சிந்தனை திருடப்படும்போது எப்படி வலிக்கும் என இப்போது புரிகிறது. இந்தத் துறையில் இவ்வளவு ஆபத்துகளுக்கு நடுவில் போராடுபவர்களுக்கு என் வணக்கங்கள்

ஒரு தயாரிப்பாளராக இருந்து 3 படங்கள் எடுத்த பின்பும் நான் துரோகத்தை சந்தித்துள்ளேன். இதுவே வேறு யாராவதாக இருந்தால் அவர் எப்படி கஷ்டப்படுவார்?

இதை நான் இப்போது சொல்வது எந்த வித மலிவான விளம்பரத்துக்கும் கிடையாது. அல்லது எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.

ஒரு எளிய மன்னிப்பு கேட்டால் போதும். பொதுவில் கூட சொல்ல வேண்டாம். தல உடன் இருக்கும்போது தவறுகள் நடக்கக்கூடாது என்பது புரிய வேண்டும். நானும் தல ரசிகன் என்பதால்தான் அவருக்கேற்றார் போல கதை எழுதினேன்.

விவேகத்தின் தரத்தைப் பற்றி நான் பேசவரவில்லை. படம் அற்புதமாக இருக்கிறது. எனது ‘ஐ-நா’ படத்தின் ஷூட்டிங் 2018ஆம் ஆண்டு தொடங்கும்.

சம்பந்தப்பட்ட நபர் என்னை சீக்கிரம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டால் நல்லது.

இல்லையேல் தேவையான ஆதாரங்களுடன் பொதுவில் சொல்லுவேன். அஜித்குமார் என்ற மனிதரை நான் மதிப்பதால் இன்னும் பொறுமையாக இருக்கிறேன்.

எதிர்காலத்திலும் இது போன்ற பிரச்சினையை யாரும் சந்திக்கக் கூடாது. எதிர்த்து கேள்வி கேட்க முடியாதே என அழக்கூடாது.

நான் சொல்வதில் நியாயம் இருக்கும் என நினைப்பவர்கள் எனக்கு நீதி கிடைக்க ஆதரவும் கொடுங்கள். உங்களைப் போல கனவுகள் இருக்கும் ஒருவன் நான். தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குநராகவும் கனவு வைத்திருப்பவன்.
NEVER EVER GIVE UP.

இவ்வாறு ரவீந்திரன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இவருடைய ஃபேஸ்புக் பதிவுக்கு ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘விவேகம்’ படத்தின் கதை தனது என்று ஒருவர் அர்த்தமில்லாத பதிவு ஒன்றை போட்டிருந்தார். அவர் என் நண்பர் தான். ஆனால் அவருக்கு ஒன்று விளம்பரம் தேவைப்படுகிறது அல்லது அவர் சிறுபிள்ளைத்தனமானவர் என நினைக்கிறேன்.

என் தொடர்பை ப்ளாக் செய்துவிட்டார். மற்ற நாயகர்களின் ரசிகர்களும் வேறு பலரும், ஒருவருக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்று அந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர். இதை ஆதரிக்காதீர்கள்.

ஏனென்றால், இந்த மாதிரியான ஆட்களால், நாளையே வேறொருவர் இது போன்ற பிரச்சினையில் மாட்டி அவரிடம் ஆதாரம் இருந்தாலும் அவரை நாம் புறக்கணித்துவிடுவோம்.

யோசித்து, ஆதரவு கொடுங்கள். கொஞ்சம் முதிர்ச்சியாக நடந்து கொள்வோம்.

இவ்வாறு சினிஷ் தெரிவித்துள்ளார்.

Ajiths Vivegam story theft Producer Ravindran Chandrasekar complaint

More Articles
Follows