லிங்குசாமி – தேவி ஸ்ரீ பிரசாத் இணையும் படத்தில் முதன்முறையாக வில்லனாகும் ஆதி

லிங்குசாமி – தேவி ஸ்ரீ பிரசாத் இணையும் படத்தில் முதன்முறையாக வில்லனாகும் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகும் படம் பெயரிடபடாத இப்படத்திற்கு RAPO19 என்றழைக்கப்படுகிறது.

இப்படத்தினை முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்குகிறார்.

‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ல் துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், படத்தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தில், நாயகன் ராம் பொதினேனிக்கு எதிர் நாயகனாக நடிகர் ஆதி பின்ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகர் ஆதி நாயகனாக நடித்து, இரு படங்கள் தமிழிலும் மேலும் இரு படங்கள் தெலுங்கிலும் வெளியாக தயாராக இருக்கின்றன.

தற்போது பன்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார்.

மாஸ் கமர்ஷியலாக, ராம் பொதினேனி நடிக்கும் ‘RAPO19’ படத்தில், எதிர் நாயகன் பாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட காரணமே, அப்பாத்திரம் வழக்கமானதிலிருந்து மாறுப்பட்ட பாத்திரமாகவும், சவால்மிக்கதாகவும், தனித்துவம் கொண்டதாகவும் இருந்தது தான்.

இம்மாதிரி வித்தியாசமான பாத்திரங்கள் துணை பாத்திரங்களாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செய்து வருபவர் ஆதி. இப்பாத்திரமும் அவருக்கு பெரிய பெயர் பெற்றுத் தரும் பாத்திரமாக இருக்கும். முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்

ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும். இந்த இரு திறமையான நடிகர்களும் திரையில் இணைந்து நடிப்பதில், பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

RAPO19 படத்தில் Uppena படப்புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Actor Aadhi to play antogonist in lingusamy film

E6o0CkEVoAkq4oC

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவுவரி செலுத்தவில்லை விஜய்.

இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்யப்படவில்லை.

நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

எனவே இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் தன்னுடைய உண்மையான இயற்பெயரில் (சி.ஜோசப் விஜய்) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு…

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடவில்லை என்றார்.

விஜய்யின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் திரைப்பட நடிகர் என தெரிவித்தார்.

திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.

பொதுமக்கள் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் – ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நாட்டை ஆளும் அளவுக்கு நடிகர்கள் உயர்ந்துள்ளனர். ரீலிலும் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்களாக நடிகர்கள் திகழ வேண்டும்.

எனவே சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார்.

இத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வரும் திங்கள்கிழமை இன்று ஜூலை 19ல் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் விஜய்யின் சொகுசு கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு அமர்விற்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

எனவே விஜய்யின் மேல்முறையீட்டு மனு இன்னும் ஒரு சில நாட்களில் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madras HC to hear Vijay’s appeal against judge’s Reel Hero remark in Rolls-Royce case

நடிகர் சூர்யா பிறந்த நாளில் ‘SURIYA-40’ பர்ஸ்ட் லுக் ட்ரீட்

நடிகர் சூர்யா பிறந்த நாளில் ‘SURIYA-40’ பர்ஸ்ட் லுக் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 40சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாககி வரும் படம் ‘சூர்யா 40’.

இதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் சூர்யா ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.

இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இதன் படப்பிடிப்பு ஜுலை 13 ஆம் தேதி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது..

இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாள்.

Suriya 40 first look release date announced

‘பொன்னியின் செல்வன்’ படத்தலைப்பு மாற்றம்.; ‘பாகுபலி’ பாணியில் டைட்டில் லுக்குடன் ரிலீஸ் அப்டேட்

‘பொன்னியின் செல்வன்’ படத்தலைப்பு மாற்றம்.; ‘பாகுபலி’ பாணியில் டைட்டில் லுக்குடன் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க பலர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முயன்றனர்.

ஆனால் லைகா நிறுவனத் தயாரிப்பில் அதை சாத்தியமாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.

இதில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, பேபி சாரா, த்ரிஷா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க நீண்ட தலை முடி வளர்த்து வருவதை நாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பார்த்து வருகிறோம்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய தோட்டாதரணி கலை பணியை செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

இந்த படம் விரைவில் முழுப்படமாக உருவாகி திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

இந்த நிலையில் பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான போஸ்டரில் PS 1 என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

(‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’) வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பொற்காலம் வாழ்வில் வருகிறது எனவும் லைகா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

The golden era comes to life! #PonniyinSelvan #PS1 #ManiRatnam @MadrasTalkies_ https://t.co/RHbwDoMv22

Ponniyin Selvan release date announced

E6qDMxwXMAAaZYv

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகள் செளந்தர்யா..; மீண்டும் தாத்தா-வாகும் சூப்பர் ஸ்டார்

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகள் செளந்தர்யா..; மீண்டும் தாத்தா-வாகும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யா.

இவர் வெங்கட் பிரபு இயக்கிய ‘கோவா’ படத்தை தயாரித்திருக்கிறார்.

மேலும் ரஜினி தீபிகா நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

அதன் பின்னர் தன் அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நடித்த விஐபி2 படத்தையும் இயக்கினார்.

சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது.

செளந்தர்யா – அஸ்வின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016ல் சட்டபடி விவாகத்து பெற்று பிரிந்தனர்.

சௌந்தர்யாவுடனே வேத் வளர்ந்து வருகிறார்.

இதனையடுத்து 3 வருடங்களுக்கு பின்னர் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் ‘வஞ்சக‌ர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தையும் ரஜினிகாந்த் பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார்.

தற்போது திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா 2வது முறையாக கர்ப்பமாகியிருக்கிறார்.

சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் ரஜினி.

அவர் சென்னை திரும்பிய பிறகுதான் இந்த விசேஷ செய்தியைச் சொன்னாராம் மகள் செளந்தர்யா.

ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக கொல்கத்தாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Star Rajinikanth to become grand father again

நடிகரும் இயக்குனரும் சூர்யா பட இசையமைப்பாளருமான டி.எஸ்.முரளி காலமானார்

நடிகரும் இயக்குனரும் சூர்யா பட இசையமைப்பாளருமான டி.எஸ்.முரளி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் நேற்று (18.7.21) காலமானார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘வசந்தசேனா வசந்தசேனா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கோத்தம் என்ற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் இவர்.

மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் விக்ரம் – நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இரண்டே பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அவர், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

சூர்யா நடித்த ஸ்ரீ பட இசையமைப்பாளர் திரு.T.S.முரளி அவர்கள், இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அன்பரது இறுதி ஊர்வலம் (19.07.2021), காலை 10 மணிக்கு, சாலிகிராமத்தில் நடைபெறும்.

விலாசம்: எண்: 2A, கண்ணம்மாள் தெரு, பரணி காலனி, சாலிகிராமம், சென்னை- 600093.

Music Composer TS Muralidharan passed away

More Articles
Follows