தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிளைகள் உள்ளன.
இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
25 முதல் 30% வரை வட்டி தருவதாக அறிவித்து இருந்தனர்.
இதனை நம்பி பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.
முதலீடு தொகை மட்டும் ரூ.2438 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வட்டி எதுவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
ஒரு கட்டத்தில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வரவே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் , சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இதுவரை இந்த மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
8 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம்.
ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றி விட்டு துபாய்க்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் விசாரணையில் இருந்து தப்பிக்கவே 2 மாதமாக ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Aarudhra financial scam actor RK suresh involved?