JUST IN ஆருத்ரா கோல்டு மோசடியை மறைக்க ஆர்கே.சுரேஷ் வாங்கிய ரூ 12 கோடி.; போட்டுக் கொடுத்த இயக்குநர்

JUST IN ஆருத்ரா கோல்டு மோசடியை மறைக்க ஆர்கே.சுரேஷ் வாங்கிய ரூ 12 கோடி.; போட்டுக் கொடுத்த இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

25 முதல் 30% வரை வட்டி தருவதாக அறிவித்து இருந்தனர்.

இதனை நம்பி பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

முதலீடு தொகை மட்டும் ரூ.2438 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வட்டி எதுவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

ஒரு கட்டத்தில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வரவே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் , சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இதுவரை இந்த மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

8 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம்.

ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றி விட்டு துபாய்க்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் விசாரணையில் இருந்து தப்பிக்கவே 2 மாதமாக ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Aarudhra financial scam actor RK suresh involved?

ஐஸ்வர்யா ரஜினி வீட்டைத் தொடர்ந்து தனுஷ் பட வில்லன் வீட்டிலும் திருட்டு

ஐஸ்வர்யா ரஜினி வீட்டைத் தொடர்ந்து தனுஷ் பட வில்லன் வீட்டிலும் திருட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மற்றும் வைரங்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து வைரங்களும் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.் மேலும் அவர் 1 கோடியில் வாங்கிய வீடும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு சினிமா பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு தென்னிந்தியாவில் முன்னணி பாடகராக இருப்பவர் யேசுதாஸின் 2வது மகன் விஜய் யேசுதாஸ்.

இவர் சில படங்களில் நடித்தும் வருகிறார். ‘மாரி’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் யேசுதாஸ்.

இந்த நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள, பாடகர் விஜய் வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் நகைகள் கடந்த டிசம்பர் மாதம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த திருட்டு விவகாரம் பிப்ரவரியில்தான் தெரியவந்ததாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தில் வீட்டு பணியாளர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijay Yesudas house burgled 60 sovereign gold stolen

‘கபாலி’ முதல் ‘அண்ணாத்த’ வரை வேற லுக்.; ‘ஜெயிலரில் ரஜினிக்கு நியூ லுக்

‘கபாலி’ முதல் ‘அண்ணாத்த’ வரை வேற லுக்.; ‘ஜெயிலரில் ரஜினிக்கு நியூ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

பான் இந்திய படமாக உருவாகி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து வில்லன் நடிகர் சுனில், இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நாயகிகளாக தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ரஜினி

இந்த படத்திற்காக ரஜினிகாந்த் தாடி வளர்த்து வந்தார். சமீப காலமாக நரைத்த தாடியில் கொஞ்சம் கருப்பு டை அடித்து பொது நிகழ்ச்சிகளில் கூட காணப்பட்டார்.

இந்த நிலையில் தாடி முழுவதையும் ஷேவ் செய்துவிட்டு புது லுக்கிற்கு மாறி உள்ளார் சூப்பர்ஸ்டார்.

அவரது நியூ லுக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் மும்பையில் நடைபெற்ற அம்பானி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தன் மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கபாலி, காலா பேட்ட தர்பார் அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினிகாந்த் தாடியுடன் காணப்பட்டார். தற்போது ‘ஜெய்லர்’ படத்தில் தாடி இல்லாத தோற்றத்திலும் ரஜினி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

Nelson changed Rajini look for Jailer movie

OFFICIAL முதன்முறையாக பாலா & அருண் விஜய் இணையும் ‘வணங்கான்’ சூட்டிங் அப்டேட்

OFFICIAL முதன்முறையாக பாலா & அருண் விஜய் இணையும் ‘வணங்கான்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது.

மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.

அருண் விஜய் நாயகனாக நடிக்க ​​ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்களுடன் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

first time team up Bala and Arun Vijay

முதன்முறையாக வெப் சீரிஸில் விஜய்சேதுபதி.; 3வது முறையாக மணிகண்டனுடன் கூட்டணி

முதன்முறையாக வெப் சீரிஸில் விஜய்சேதுபதி.; 3வது முறையாக மணிகண்டனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது.

இந்த வெப் சீரிஸில், விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார்.

இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக விளங்கும் விஜய்சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் இயக்குநர் M.மணிகண்டன்.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் M.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.

இந்த புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

7C’s Entertainment Pvt Ltd (P ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

B அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் K அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர்.

இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay Sethupathi first time acting in a web series

தோல்வியை வெற்றியாக்கியவர் ரஜினி.; ‘பாபா’ படம் என் தென்னிந்திய சினிமாவை முடிச்சிட்டு – மனீஷா கொய்ராலா

தோல்வியை வெற்றியாக்கியவர் ரஜினி.; ‘பாபா’ படம் என் தென்னிந்திய சினிமாவை முடிச்சிட்டு – மனீஷா கொய்ராலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியான அர்ஜூனின் ‘முதல்வன்’ மற்றும் கமலின் ‘இந்தியன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா.

இந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து மனீஷாவுக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு 2002ல் அமைந்தது.

ரஜினியுடன் ‘பாபா’ படத்தில் நாயகியாக நடித்தார் மனிஷா. ஆனால் அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் ரஜினி பற்றியும் பாபா படம் குறித்தும் பேசியுள்ளார் மனீஷா.

‘2002ல் மிகப்பெரிய படமாக பேசப்பட்டது ‘பாபா’. எனவே அந்த படத்தின் மூலம் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன்.

‘பாபா’ கொடுத்த பெரும் தோல்வியால் எனக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் பெரும் தோல்வி அடைந்தது.

ஆனால் சமீபத்தில் 2022-ல் பாபா படத்தை ரீ-ரீலிஸ் செய்தார் ரஜினிகாந்த். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. ஒரு தோல்வி படத்தை கூட ஹிட் ஆக்கியவர் ரஜினிகாந்த். அவருக்கு தோல்வி என்பதே கிடையாது.” என தெரிவித்துள்ளார் மனீஷா.

Rajinism Baba disaster Manisha Koirala open talk

More Articles
Follows