தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார் நடிகை ஓவியா.
இதனால் பல புதிய ரசிகர்களை அவர் பெற்றுள்ளார்.
நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலித்தார்.
ஆனால் அவர் மறுக்கவே, விரக்தியுடன் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து வெளியேறினார்.
அதன்பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் கமலை சந்தித்து பேசினார்.
அப்போதும் ஆரவ்வை காதலிப்பதாகவும், அவருக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.
இதுகுறித்து நடிகர் ஆரவ் அவர்களின் அம்மா கூறும்போது… ஆரவ் சம்மதித்தால் ஓவியாவை மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது