‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’. இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் – பிரகாஷ், இயக்கம் – எடிசன் ராபர்ட், இசை – அகில்கிருஷ்ணா, ஒளிப்பதிவு – பிஜு போத்தன் கோடு.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் எடிசன் ராபர்ட் கூறுகையில்,

இப்படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணகுமார் கதாநாயகியாக கல்யாணி நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நந்தன், விஷ்ணு, காவியா, ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பார்வையற்ற தாத்தா ஆறு ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கிறார். அந்த ஆறு குழந்தைகளும் பிச்சை எடுத்து வந்து தாத்தாவிடம் பணம் கொடுக்கிறார்கள். தாத்தா அவர்களுக்கு உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்.

ஒரு கட்டத்தில் தாத்தா இறந்து விட ஆறு குழந்தைகளும் அனாதை ஆகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நேரத்தில் அவர்களை தேடி ஒரு பாட்டி வருகிறார்.
அவர் யார்? ஏன் அவர்களை தேடி வந்தார் என்பதை எதார்த்த வாழ்வியலோடு சொல்லி இருக்கும் படம் தான் ‘ஆலம்பனா’.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. சென்னை, கேரளா மற்றும் UK வில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

‘அயலான்’ படத்தில் 3 வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரித்தி சிங் இணையும் படம் அயலான்.

இந்த படம் முன்பே அறிவிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதி-சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் வெற்றிபெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் அனிருத் இசையமைக்க விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணையும் ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி.?

2016-ம் ஆண்டே இந்த படம் குறித்த தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..

தற்போது செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

மேலும் மற்றொரு நாயகியாக சமந்தாவும் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கவுள்ளதாம்.

கோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழுத்தமான கதை, வித்தியாசமான கரு, திரைக்கதை அமைப்பில் நவீனம், உருவாக்கத்தில், தொழில்நுட்ப வல்லமை என அசத்தும் படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும், எல்லை தாண்டி பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையம் பரவிவிட்ட நவீன இந்தியாவில், ஒரு மொழியில் ஹிட்டடிக்கும் படங்களுக்கு, மற்ற மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீப காலங்களில் தென் இந்திய திரைப்படங்கள் பெரும் விலையில் ஹிந்தியில் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்பட்டு அங்கு மொழிமாற்றம் செய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. நம் தென்னிந்திய படங்களில் தமிழ் படங்களுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் அங்கே இருந்து வருகிறது. இந்த நிகழ்வுகள் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழுவிற்கு தேன் தடவிய உற்சாக செய்தியாக தற்போது மாறியுள்ளது. இன்னும் படமே வெளிவராத நிலையில் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் ஈர்ப்பில் “ப்ரேக்கிங் நியூஸ்” படம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹிந்தியில் 1.8 கோடிக்கு ரைட்ஸ் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து ராகுல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் கூறியதாவது…

தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்திய நகரங்களில் கிடைக்கும் மிகப்பெரும் வரவேற்பு எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. வட இந்திய பகுதிகளில் வாழும் மக்கள், நம் தமிழ் படங்களை வெகுவாக ரசிக்கிறார்கள். நம் படங்களில் உள்ள நேர்த்தியும், உணர்வூப்பூர்வமிக்க உறவுகளின் கதைகளும், அவர்களை பெரிதளவில் ஈர்க்கின்றன. எங்கள் “ப்ரேக்கிங் நியூஸ்” படத்தில் இவை அனைத்தும் அச்சு பிசகாமல் அட்டகாசமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியனின் அற்புதமான உருவாக்கத்தில், “ப்ரேக்கிங் நியூஸ்” படம் உலக ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும், அதிரடியான திரைக்கதையில், வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கதை ஒரு திரில் பயணமாக மூளைக்கு வேலை தரும் திரைக்கதையில் அமைக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளையும் சரியாக சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ஜெய்யின் கடின உழைப்பும்,அர்ப்பணிப்பும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மிளிரும். பட வெளியீட்டிற்கு முன்பே வெற்றிக்கு அடையாளமாய் ஹிந்தி ரைட்ஸ் பெரும் விலைக்கு விற்கப்பட்டது படக்குழு அனைவருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரையும். தற்போது படப்பிடிப்பு முடிந்து, இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கவரும் படத்தை வருகிற 2020 மே மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் “ப்ரேக்கிங் நியூஸ்” தமிழில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர்ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. “வேதாளம்” புகழ் ராகுல் தேவ், “சுறா” புகழ் தேவ் கில் ஆகிய இருவரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பானு ஶ்ரீ நாயகன் ஜெய் மனைவியாக, இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞரகள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள். N M மகேஷ் கலை இயக்கம் செய்ய, ராதிகா நடன அமைப்பை செய்துள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குநராக ஸ்டன்னர் சாம் பணியாற்ற, தேனி சீனு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

என் 20 வருச சினிமாவுல இதான் பெஸ்ட்; ஏர் போர்ட்டில் சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

அசுரனை அடுத்து ஜிவி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார்.

இதில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

அண்மையில் ஊர்க்குருவி பருந்தாகுது என்ற முதல் பாடல் வெளியானது.

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

இரண்டாவது பாடலான வெய்யோன் சில்லி ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தில் இன்று சென்னை விமான நிலையத்தில் வெளியானது.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்துள்ளனர்.

இதையடுத்து 45 நிமிடங்கள் வானில் பறந்த விமானத்தில் வெய்யோன் சில்லி பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், நடிகர் சிவக்குமார், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சக்தி பிலிம் பேக்டர் சக்திவேல், 2டி ராஜசேகரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.

5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

இந்த நிகழ்வில் சூர்யா பேசியதாவது…

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 1% குறைவான மக்களே விமானத்தில் பறக்கும் வசதியை பெற்று இருந்தனர்.

இதனை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் மாற்றியமைத்து கிட்டதட்ட ஒரு ரூபாய் செலவில் விமானத்தில் பறக்க வைத்தார். அவரின் கதையை தான் படமாக்கியிருக்கிறோம்.

இந்த படத்தில் நடித்துள்ள மோகன் பாபுக்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவரின் ஒத்துழைப்பு மறக்க முடியாது.

அதுபோல் எங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்த ஸ்பைஸ் ஜெட் அஜய் சிங் அவர்களுக்கும் நன்றி.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். கிட்டதட்ட 10 வருட உழைப்பை இதற்காக அவர் செலவிட்டுள்ளார்.

அவரை தவிர யாராலும் இதுபோன்ற படத்தை எடுத்துவிட முடியாது.

ரஜினி-விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் மாளவிகா

என் 20 வருட சினிமா கேரியரில் இதுதான் பெஸ்ட் டைம் என்பேன்.

இந்த விமானத்தில் 70 குழந்தைகளை பறக்க (பயணிக்க) வைத்துள்ளோம். அவர்களுக்கு இதுதான் முதல் விமான பயணம். இதற்காக ஒரு சின்ன தேர்வு போல வைத்து அவர்களை தேர்வு செய்தோம்.

அவர்கள் எல்லாருக்கும் தங்களை விட தங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது ஒருவரை பயணிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

இந்த வெயிலும் இந்த செய்தியை பதிய வந்துள்ள பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என பேசினார் சூர்யா.

இந்நிகழ்வில் குறிப்பிட்ட முன்னணி பத்திரிகையாளர்கள் மற்றும் ட்விட்டர் குழுவினர் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

Suriya emotional speech at Soorarai Pottru Veyyon Silli song launch

ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைகளமாக அமைகிறது. இப்படத்தில் ஒரு வாய் பேசமுடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இப்படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திகிலுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாதவன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் இணைந்து, அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ’ஹேரோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷானில் தியோ ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பை கவனிக்க, அலெக்ஸ் டெர்சிஃப் சண்டை காட்சிகளை அமைக்க, சாட் ராப்டர் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு மணி சியான் வசனம் எழுத, காட்சிகளுக்கு ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைக்க, பின்னணி இசைக்கு கிரீஷ் கோவிந்தன் பொறுப்பேற்று இருக்கிறார்.

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வ பிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில், மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், 5 மொழிகளில் உருவாகியிருக்கும் திகில் படமான ‘சைலன்ஸ்’, உலகமெங்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்
மாதவன்
அனுஷ்கா ஷெட்டி
அஞ்சலி
ஷாலினி பாண்டே
மைக்கேல் மேட்சன்
சுப்பராஜூ,
ஸ்ரீநிவாஸ் அவசரளா
ஹன்டர் ஓ’ஹேரோ உள்ளிட்ட பலர்

தயாரிப்பு: பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத், கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட்
இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா
ஒளிப்பதிவு: ஷானில் தியோ
படத்தொகுப்பு: பிரவீன் புடி
இசை: கோபி சுந்தர்
பின்னணி இசை: கிரீஷ் கோவிந்தன்
பாடல்கள்: கருணாகரன்
கலை: சாட் ராப்டர்
சண்டை பயிற்சி: அலெக்ஸ் டெர்சிஃப்
ஸ்டைலிஸ்ட்: நீரஜா கோனா
திரைக்கதை, வசனம்: மணி சியான்
கதை, இயக்கம்: ஹேமந்த் மதுக்கர்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

More Articles
Follows