மாணவிக்கு உதவிட வெப் சீரிஸ் டைட்டில் சாங் பாடிய ஜிவி. பிரகாஷ்

மாணவிக்கு உதவிட வெப் சீரிஸ் டைட்டில் சாங் பாடிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

“’ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே!
ஹே நண்பா… கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” – என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ்.

இவர்கள் இருவருமே விகடனால் பட்டை தீட்டப்பட்ட இளம் திறமையாளர்கள் என்பது கூடுதல் தகவல்.

‘இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது தான் இதில் ஹைலைட்டே..

இந்த ‘ஆதலினால் காதல் செய்வீர்’ டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Aadhalinaal Kaadhal Seiveer Digital Series – #HeyNanba Song Teaser Sung by GV Prakash

குழந்தைகளுக்காகவே படம் இயக்கி தயாரிக்கும் அருண் வைத்தியநாதன்

குழந்தைகளுக்காகவே படம் இயக்கி தயாரிக்கும் அருண் வைத்தியநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசன்னா-சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் ‘நிபுணன்’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், ‘சீதக்காதி’ இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் கூறுகையில்,…

“குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும்.

அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம்.

குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.

‘அன்புக்கொரு பஞ்சமில்லை’ என்பதே படத்தின் சாராம்சம் என்று அருண் வைத்தியநாதன் மேலும் கூறினார்.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள். OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை.

இந்தப் படத்தின் கதையை நான் கொரோனாவுக்கு முன்னரே எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்த உள்ளோம்,” என்று அருண் கூறினார்.

இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருண் வைத்தியநாதன் தயாரிக்கிறார்.

Director Arun Vaidyanathan turns producer for children based film

புதுச்சேரி காரைக்காலில் பள்ளி-கல்லூரிகள் திறப்பது எப்போது.? அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி காரைக்காலில் பள்ளி-கல்லூரிகள் திறப்பது எப்போது.? அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக தமிழகத்தை பின்பற்றியே புதுச்சேரி மாநிலத்தில் அரசு நடவடிக்கைகள் சில இருக்கும்.

தமிழ்நாடு பாடநூல் திட்டத்தை பின்பற்றியே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் செயல்படுகிறது. பொதுத்தேர்வு முறைகளும் அப்படியே உள்ளன.

இங்கும் தமிழே வழக்கு மொழியாக உள்ளதால் தமிழ் படங்கள் ரிலீசும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ரிலீசாகி வருகின்றன.

இதனிடையில் தான் புதுச்சேரி & காரைக்காலில் சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 1 முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15 வரை வரை தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.

இதனால் கல்வி நிலையங்கள் திறப்பது மாறுபடுமோ.? என்ற சந்தேகம் புதுச்சேரி காரைக்கால் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது…

“கொரோனா மூன்றாவது அலை எப்போது உறுதியாகும் என தெரியவில்லை.

இன்று மூன்று குழந்தைகள் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுள்ளது.

கல்லூரிகள் மாணவர்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்பு கல்லூரிகள் திறக்க முடிவு.

கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆளுநர் மற்றும் முதலமைச்சரை ஆலோசித்து முடிவு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.” என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

When will schools reopen in Pondicherry ?

நடிகர் பிரேம்ஜி அமரன் இசையில் ERROR

நடிகர் பிரேம்ஜி அமரன் இசையில் ERROR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திலகா ஆர்ட்ஸ்’ சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் ‘Error’ படத்தை அறிமுக இயக்குனர் ஜி. பி. கார்த்திக் ராஜா இயக்குகிறார்.

இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் எடிட்டராகவும் பணியாற்றினார்.

நாயகனாக ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்பட நாயகன் கார்த்தீஸ்வரன் நடிக்கிறார்.

நாயகியாக இனியா நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசை பிரேம்ஜி அமரன். ஒளிப்பதிவு விவேக்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.

Premgi Amaren to compose music for Error

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா. : 15 தலைவர்களுடன் இணையும் கருணாநிதி படம்.: திறந்து வைக்கும் ஜனாதிபதி.; ரஜினிக்கு அழைப்பு

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா. : 15 தலைவர்களுடன் இணையும் கருணாநிதி படம்.: திறந்து வைக்கும் ஜனாதிபதி.; ரஜினிக்கு அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அன்று சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது.

1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஆட்சியின் போது, சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது.

சட்டமன்றம் 100 ஆண்டுகள் நினைவுப்படுத்தும் வகையில் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது

இந்த விழாவையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுகிறது.

இன்று (02/08/2021) மாலை 05.00 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான விழா நடைபெறும்.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவை அரங்கில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 15 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

16வதாக, தமிழ்நாட்டில் முதல்வராக 5 முறையும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய கருணாநிதியின் முழுஉருவப்படம் திறக்கப்படுகிறது.

இன்று கலைஞரின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

விழா முடிந்ததும், மீண்டும் ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசுத் தலைவர், இரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்

இந்த விழாவில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

President Ram Nath Kovind will unveil the portrait of former Chief Minister late M. Karunanidhi at the Legislative Assembly

ரேஷன் கடைகளில் அரிசி எண்ணெய் உணவு தானியங்கள் இலவசம்.; ஆதார் கார்டு அவசியமா.?

ரேஷன் கடைகளில் அரிசி எண்ணெய் உணவு தானியங்கள் இலவசம்.; ஆதார் கார்டு அவசியமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாவது…

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையின் திட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளி/ஓணம் பண்டிகை காலங்களில் இலவசமாக சர்க்கரை விநியோகம் செய்யப்படும்.

அதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-ன் கீழ் உணவு மானியம், புதுச்சேரியில் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள/அந்தியோதயா அன்ன யோஜனா (BPL/AAY) உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் பண்டிகை பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.

இந்த திட்டங்களின் கீழ் பயனடைய ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது அந்த நபருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் வரை- புகைப்படம் ஒட்டப்பட்ட மாற்று ஆவணங்களை அளிப்பதற்கான குடிமைப்பொருள் வழங்கல் துறையின் முன்மொழிவிற்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Is Aadhaar card mandatory for to get food products from ration shop in Pondy

More Articles
Follows