தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.
இதனால் உலகளவில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.
இந்த கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க பல வழிமுறைகளை அரசாங்கம் சொல்லி வருகிறது.
அதில் முக்கியமாக முக கவசம் அணிய வேண்டும் என்பது தான்.
இதனால் அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே தங்களின் வேலைகளை கவனித்து வருகின்றனர்.
ஒரு சிலர் கர்ச்சீப்பை, துப்பட்டாவை முக கவசமாக அணிந்து செல்கின்றனர்.
சிலர் விலை உயர்ந்த மாஸ்க்குகளை வாங்கி அணிகின்றனர்.
இந்த நிலையில் பூனேவில் ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தில் மாஸ்க் செய்து அதனை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார்.
இந்த கோல்ட் மாஸ்கின் மதிப்பு கிட்டதட்ட ரூ. 3 லட்சம் என சொல்லப்படுகிறது. (தங்க விலை இன்றைய நிலவரப்படி..ஹி..ஹிஹி)
இந்த மாஸ்கில் மூச்சு விடுவதற்காக சின்ன சின்ன ஓட்டைகள் வைத்து டிசைன் செய்துள்ளனர்.
இது கொரோனா வராமல் தடுக்குமா? என தெரியாது. ஆனால் இதை அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் சொல்கிறார்.
மாஸ்க் மட்டுமில்லாமல் அவரின் கழுத்தில் பெரிய செயின், கையில் அனைத்து விரல்களில் மோதிரமும் உள்ளது. (படத்தை பார்க்கவும்.)
A Pune man wearing Gold Mask worth Rs 3 lakhs