40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்.; இருவருக்கும் ஒரு ஒற்றுமை

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்.; இருவருக்கும் ஒரு ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு இன்று ஜூன் 27ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா என்ற பெண் ஒருவர் புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாத்துரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார்.

அவருக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் உறுப்பினருக்கு என்‌.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடமளித்துள்ளது.

ரேணுகா அப்பாத்துரை & சந்திர பிரியங்கா ஆகிய இருவருக்குமே கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A female minister Chandra Priyanka after 40 years in Puducherry

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரியில் பதவியேற்ற 5 அமைச்சர்கள் விவரம்.; சட்டமன்றத்தில் முதன்முறையாக பாஜக.!

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரியில் பதவியேற்ற 5 அமைச்சர்கள் விவரம்.; சட்டமன்றத்தில் முதன்முறையாக பாஜக.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரியில் பதவியேற்ற 5 அமைச்சர்கள் விவரம்.; சட்டமன்றத்தில் முதன்முறையாக பாஜக.!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு இந்த புதிய அமைச்சரவையில், நீண்ண்ண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகளும், பாரதீய ஜனதா கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும் மற்றும் சபாநாயகர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

ஒன்றியம் எனச்சொல்லி பதவியேற்றனர். கடவுள் பெயரால் உறுதி மொழி ஏற்றனர். அப்போது, “இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்” என சொல்லி பதவியேற்றனர்.

இந்த அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பின்போது முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் ஆசி பெற்றனர்.

என்ஆர் காங். அமைச்சர்கள் விவரம்…:

என்.ஆர்.காங். சேர்ந்த மங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் 3வது முறையாக அமைச்சராகிறார். முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்துள்ளார்.

NR .காங்கிரஸ் கட்சியின் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் 3வது முறையாக அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2 முறை அமைச்சராக இருந்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள நெடுங்காடு தனித் தொகுதியில் வென்ற சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றார்.

முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், தொடர்ந்து 2வது முறையாக நெடுங்காடு தனித் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக அமைச்சர்கள். :

பாஜகவை சேர்ந்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் 4வது முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ளாட்சி துறை, கலால் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் மூன்று முறை அமைச்சராக இருந்துள்ளார்.

ஊசுடு தனித் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாய் சரவணன் குமார் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான இவர் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

சந்திர பிரியங்கா (என் ஆர் காங்.) மற்றும் சாய் சரவணன் குமார் (பாஜக) ஆகிய இருவரும் முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்கள் இருவருமே தனித்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பதவியேற்பு விழா நிகழ்வில் தமிழக பாஜகத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா நிறைவு பெற்றது.

Puducherry Government New Ministers list updates

உங்க மகளுக்கு தற்காப்பு கற்பிப்பதற்கு பதிலாக மகனுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுங்கள் – ஓவியா

உங்க மகளுக்கு தற்காப்பு கற்பிப்பதற்கு பதிலாக மகனுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுங்கள் – ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடித்து பிரபலமானதை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஓவியா.

இவர் தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுபவர்.

இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பு குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஓவியா.

அதில்…

பெற்றோர்களே உங்கள் மகள்களுக்கு தற்காப்பு, MeToo குறித்து கற்பிப்பதற்கு பதிலாக, மகன்களுக்கு பெண்களை மதிக்கவும், அவர்களை எப்படி அணுகுவது என்பது பற்றியும் சொல்லிக்கொடுங்கள்: நடிகை ஓவியா ட்வீட்.

“Instead of teaching your daughters self defence and #metoo.. teach your sons about respect and consent.

Teach your sons about respect and consent says Oviya

பழ. கருப்பையா பொன்ராஜ் ஸ்ரீப்ரியா.: மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்

பழ. கருப்பையா பொன்ராஜ் ஸ்ரீப்ரியா.: மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

26-06-2021 நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது…

கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.

அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான்.

எனினும் அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

சிவ. இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

செந்தில் ஆறுமுகம் தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர்.

’நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலரவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவராகத் திகழ்பவர்.

ஃபுட்கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

புதிய நியமனங்கள்:
1. திரு. பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. திரு. ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. திரு. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. திரு. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. திரு. சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. திரு. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. திருமதி ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
9. திரு. ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள்.

இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றார்.

நன்றி.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Kamal announces Makkal Needhi Maiam Party new Posting list

உலகத் தமிழர்கள் நன்கொடையில் உருவான பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படம் ‘மேதகு’

உலகத் தமிழர்கள் நன்கொடையில் உருவான பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படம் ‘மேதகு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Methaguதமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான வே. பிரபாகரன் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் உலகத்தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகின்றார் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை மெருகூட்டியுள்ளனர்.

இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணைப் புரிந்துள்ளனர்.

இந்த திரைப்படம் BS value என்கின்ற இணையவெளி திரையில் இன்று (OTT) ஜூன்-25 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

இந்த மேதகு திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்வையிட்ட நடிகர் சத்யராஜ், நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மேதகு திரைப்படம் வெளியாகும் BS value OTT தளம் ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் முதன்முறையாக வெளிவரவிருக்கின்றது.

தமிழர்களின் வரலாற்றை கலைவடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டப்போகும் ‘மேதகு’ போன்ற பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது பாராட்டுக்குரியது.

Prabakaran’s Methagu biopic will release in OTT

அசோக் ஷீலா சாந்தினி இணையும் ‘மாயத்திரை’ தியேட்டர்களில் ரிலீஸ்

அசோக் ஷீலா சாந்தினி இணையும் ‘மாயத்திரை’ தியேட்டர்களில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maayathiraiபிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.

டூலெட், திரௌபதி, மண்டேலா படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் .

V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு சென்சார் குழுவினரால் UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .

திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் . ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .

இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம். இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – V.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு – இளையராஜா
கலை இயக்கம் – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

Ashok and Shanthini starrer Maayathirai gets theatrical release

More Articles
Follows