தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் கடந்த 45 வருடங்களாக ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்.
இன்றைய தலைமுறை நடிகர்களால் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். ரசிகர்கள் இவரை திரையை தாண்டி உயிருக்கு உயிராக நேசித்து வருகின்றனர்.
1990களில் அண்ணாமலை, பாட்ஷா பட ரீலீஸ் சமயம் முதலே ரஜினியை அரசியலுக்கு அழைக்க தொடங்கினர். அவரும் வரவேண்டிய நேரத்துல சரியா வருவேன் என சினிமாக்களில் பன்ச் டயலாக் பேசினார்.
எனவே தமிழகமே ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினர். இது 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் கேள்வியாக இருந்தது. இதற்கு விடை சொல்லாமல் மௌனமாகவே இருந்து வந்தார் ரஜினி.
கடந்த 2011ஆம் ஆண்டில் உடல்நல குறைவால் ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற சென்ற போது ரசிகர்கள் பலர் நிம்மதியை இழந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மொட்டை போட்டனர், மண் சோறு சாப்பிட்டு ரஜினி நலம் பெற வேண்டினர்.
அப்போது ஆடியோவில் ரஜினி பேசியபோது.. நான் நடிகன். காசு வாங்குறேன்.. நடிக்கிறேன்.. என் மீது இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க… நான் உங்களுக்கு என்ன செய்ய போகிறேன்.
நான் சிகிச்சை முடிந்து திரும்பி பின்னர் என் ரசிகர்கள் தலை நிமிர செய்வேன் என உருக்கமாக பேசியிருந்தார்.
அதன் பின்னர் சரியாக 2017 டிசம்பர் 31ல் தன் அரசியல் பிரவேசத்தை முறையாக அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021 பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவேன் என பேசினார்.
தமிழக அரசியல் சிஸ்டமே சரியில்லை. எவருமே பார்க்காத ஆன்மிக அரசியலை தமிழகம் பார்க்கும் என பல மேடைகளில் பேட்டிகளில் சொல்ல ஆரம்பித்தார்.
2021ல் தமிழக விரும்பும் அற்புதம் அதிசயம் நடக்கும் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வந்தார்.
மேலும் ரஜினி ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இதனால் பல அரசியல் கட்சிகள் கலங்கி நின்றன. ரஜினியுடன் கூட்டணி போட பல பிரபலங்கள் காத்திருந்தனர்.
ஆனாலும் ரஜினி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். காலா, 2.0, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
2020 தொடக்க முதலே கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. எனவே ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமானது. ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? என ரசிகர்களே சந்தேகம் அடைந்தனர்.
ஆனாலும் ஒரு சிலர் ரஜினியை நம்பி கொண்டு இருந்தனர்.
2021 பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட இல்லையே ரஜினி தாமதம் சரியா? என நடுநிலையாளர்களே கேட்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 2020 டிசம்பர் 29ல்… நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை’ என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.
இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் துடித்தனர். கழுத்து வெட்டப்பட்ட கோழி உயிருக்கு போராடும் வலியை அவர்கள் அனுபவித்தனர் என்று கூட சொல்லலாம்.
கிட்டதட்ட 25 வருடங்களாக அரசியல் அறிவிப்பை அறிவிக்காத ரஜினி 2017 முதல் 2020 வரை அரசியல் தொடர்பான அறிவிப்புகள் தகவல்களை பேசி.. இப்படி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கதறினர்.
ஆனால் ஒரு சிலர் 2021 ஜனவரி 10ல் போராட்டம் நடத்தி ரஜினியை மீண்டும் அரசியல் அழைத்தனர். அதையும் ரஜினி கண்டித்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிக்கை விட்டார்.
ரஜினி வெளியிட்ட அறிக்கையில்…
இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.
ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினி அரசியல் அறிவிப்புகள்…
* 2017 டிசம்பர் 31-ந்தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.
* 2018 ஜனவரி 1-ந்தேதி, ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க ‘ரஜினி மன்றம்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
* 2018 ஜனவரி 6-ந்தேதி, ரஜினி மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டது.
* 2018 பிப்ரவரி 24-ந்தேதி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், ‘அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்று பரபரப்பாக பேசினார்.
* 2018 மார்ச் 12-ந்தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், ‘எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்று உறுதியாக கூறினார்.
* 2019 பிப்ரவரி 17-ந்தேதி, ‘சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
* 2019 நவம்பர் 22-ந்தேதி, ‘2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும்’ என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
* 2020 மார்ச் 13-ந்தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை; முதல்-அமைச்சர் ஆகமாட்டேன்’ என திட்டவட்டமாக அறிவித்தார்.
* 2020 நவம்பர் 31-ந்தேதி, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, “அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் தெரிவிப்பேன்” என்று கூறினார்.
* 2020 டிசம்பர் 3-ந்தேதி, “ஜனவரியில் கட்சி தொடக்கம். 31-ந்தேதி அதுபற்றி அறிவிக்கிறேன்” என டுவிட்டரில் பதிவிட்டார்.
* 2020 டிசம்பர் 14-ந்தேதி, ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றார்.
* 2020 டிசம்பர் 25-ந்தேதி, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
* 2020 டிசம்பர் 27-ந்தேதி, 3 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பினார்.
* 2020 டிசம்பர் 29-ந்தேதி, ‘நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை’ என்று ரஜினி அறிவித்தார்
A day which Thalaivar fans want to forget but not able to