தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

masterதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படமான விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் நடிப்பிற்காக எந்தத் தோற்றத்தையும் தனக்குள் கொண்டு வரும் சியான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் 90 நாட்கள் ஷுட்டிங் நிறைவுற்றுள்ளது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மட்டுமே பாக்கி இருக்கிறது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஷுட்டிங் 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. விறுவிறுப்பான கதை அம்சம் உள்ள இப்படம் சிறப்பாக வளர்ந்து வருகிறது

மேலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இளைஞர்களின் ஆதர்ச இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஆக்ஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. விஜய்சேதுபதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெற்றிக்கூட்டணி என்பதால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமான படமாக இருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்து தளர்வு வந்ததும் இப்படங்களின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் இருக்கும் என்று நம்பலாம்.

திருமணமான த்ரிஷாவை துரத்தும் அஜித் & சிம்பு & விஜய்சேதுபதி.; நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணமான த்ரிஷாவை துரத்தும் அஜித் & சிம்பு & விஜய்சேதுபதி.; நெட்டிசன்கள் ட்ரோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Trishas Karthik Dial Seytha Yenn memes goes viral 2010ல் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக கொரோனா லாக் டவுனில் 12 நிமிடக் குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.

இந்த குறும்படத்திற்கு கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளனர்.

இதிலும் சிம்பு த்ரிஷா நடித்துள்ளனர். இசை ஏஆர். ரஹ்மான். இதை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

லாக் டவுனில் சென்னையில் சிம்புவும் கேரளாவிலும் த்ரிஷாவும் மாட்டிக் கொண்டது போலவும் உள்ளது. அவரவர் வீடுகளில் இருந்து செல்போனில் பேசும் படியாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கதைப்படி த்ரிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளது. த்ரிஷா பெயர் ஜெஸ்ஸி. இவரது கணவர் பெயர் ராய்.

தன் அடுத்த படத்திற்கு கதை எழுத முயற்சிக்கும் சிம்பு திடீரென தன் பழைய காதலை நினைத்து த்ரிஷாவுக்கு போன் செய்கிறார்.

நீ வேண்டும்.. உன் கால்ல வாழனும் என்கிறார் சிம்பு. நீ என்னுடைய மூன்றாவது குழந்தை என்கிறார் த்ரிஷா.

சிறிய உரையாடலுக்கு பிறகு த்ரிஷாவின் பேச்சை கேட்டு குஷியான சிம்பு மீண்டும் கதை எழுதுகிறார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு கணவர் இருக்கமாட்டார். குழந்தை இருக்கும். அப்போதும் த்ரிஷாவை காதலிப்பார் அஜித். ஒரு கட்டத்தில் த்ரிஷா இறந்த பின் அந்த குழந்தையை அஜித் வளர்ப்பார். பின்னர் அனுஷ்கா வருவார் என்பது எல்லாம் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதுபோல் ஓரிரு வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார். ராம் என்ற கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருப்பார்.

அந்த கதைப்படி த்ரிஷாவுக்கும் திருமணம் ஆகியிருக்கும்.

விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகியிருக்காது. ஆனால் தன் பழைய காதலியை நினைத்து உருகுவார். இவர்கள் சந்திப்பதுபோல் கதை இருக்கும்.

இந்த படங்களில் த்ரிஷாவை மையப்படுத்தியே காட்சிகள் இருக்கும்.

தற்போது இந்த 3 பட காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது பற்றிய மீம்ஸ்கள் இன்று இணையத்தில் அதிகளவில் காணப்படுகிறது.

Simbu Trishas Karthik Dial Seytha Yenn memes goes viral

Simbu Trishas Karthik Dial Seytha Yenn memes goes viral

 

 

கௌதம் வாசுதேவ் மேனன் & ஜிவி. பிரகாஷ் இணையும் ‘செஃல்பி’..?

கௌதம் வாசுதேவ் மேனன் & ஜிவி. பிரகாஷ் இணையும் ‘செஃல்பி’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and gautham menonதேசிய விருது இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்தவர் மதிமாறன்.

இவரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மோகன்லால் நடிக்கும் ’த்ரிஷ்யம் 2’.; தமிழுக்கு கமல் ஓகே சொல்வாரா..?

மோகன்லால் நடிக்கும் ’த்ரிஷ்யம் 2’.; தமிழுக்கு கமல் ஓகே சொல்வாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlal kamal haasanஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளியான படம் ’த்ரிஷ்யம்’.

இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் கமலஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் ஜீத்து ஜோசப் ’பாபநாசம்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

தமிழிலும் வசூல் வேட்டையாடி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ’த்ரிஷ்யம்’ பட இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்திருக்கிறாராம்.

இதில் மீண்டும் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மோகன்லால் நடிப்பில் ’ராம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இதே இயக்குனர் ஜித்து ஜோசப்.

கொரோனா ஊரடங்கால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சினைக்கு பின் அந்த படத்தை முடித்துவிட்டு ’த்ரிஷ்யம்’ 2ஆம் பாகம் படத்தை இயக்குவார் ஜீத்து ஜோசப் என சொல்லப்படுகிறது.

தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா? அதற்கு கமல் ஓகே சொல்வாரா? என்பதுதான் தெரியவில்லை.

38 ஆண்டுகளுக்கு பிறகு ’முந்தானை முடிச்சு’ ரீமேக்..; பாக்யராஜ் & சசிகுமார் கூட்டணி

38 ஆண்டுகளுக்கு பிறகு ’முந்தானை முடிச்சு’ ரீமேக்..; பாக்யராஜ் & சசிகுமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mundhanai mudichu remakeஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ’முந்தானை முடிச்சு’.

கடந்த 1983ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாயகியாக ஊர்வசி நடித்திருந்தார்.

சூப்பர் டூப்பர் ஹிட்டான் இந்த படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் சீன்ஸ் இன்றுவரை பிரபலம்தான்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு இப்பட ரீமேக்கை உருவாக்கவுள்ளார் கே.பாக்யராஜ்.

’முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் பாக்கியராஜ் உடன் சசிகுமார் இணைய உள்ளதாகவும், ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உரிமையை ஏவிஎம் நிறுவனத்திடம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

நானொரு வட இந்திய பெண் என யாருமே யோசிப்பதில்லை… – ஜோதிகா

நானொரு வட இந்திய பெண் என யாருமே யோசிப்பதில்லை… – ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress jyothikaஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது.

மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும் இந்தப் படம் குறித்து ஜோதிகா கூறியதாவது:

இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில் 5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாது. அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படி தங்களுடைய கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொள்கிறார்கள்,

நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாக கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் 3 -4 நீளமான வசனக் காட்சிகள் இருக்கிறது. 3 மாதத்துக்கு முன்னாடியே படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை இயக்குநர் கொடுத்துவிட்டார். பார்த்திபன் சாருடன் நின்றுக் கொண்டு வசனம் பேசி நடிப்பதே சவால்தான். ப்ரட்ரிக் எனக்கு நிறைய நேரம் கொடுத்திருந்தார்.

நான் நடித்த படங்களில் நிறைய முன் தயாரிப்பு செய்து நடித்த படம் இது தான். இந்தக் கதையை முதல் முறையைக் கேட்ட போதே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இதுவரை நான் நடித்த படங்களிலேயே அதிக உழைப்பைப் போட்டுள்ள படம் இது தான். ஏனென்றால், இந்தப் படத்தின் கதை எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

இந்தப் படத்தில் வெண்பா என்ற வக்கீலாக நடித்துள்ளேன். உயர்நீதிமன்ற வக்கீலாகவோ, உச்சநீதிமன்ற வக்கீலாகவோ நடிக்கவில்லை.

ஊட்டியில் ஒரு சின்ன நீதிமன்றத்தின் வக்கீலாக நடித்துள்ளேன். முதல் முறையாக வக்கீல் உடையணியும் போது ரொம்ப வலுவாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது.

வக்கீல் உடையணிந்து வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். வார்த்தைகளின் பலம் இதில் இருக்கும். வக்கீல் கதாபாத்திரத்துக்காக 2டி ராஜசேகர் ஒரு வக்கீல் என்பதால் அவரிடம் நிறையப் பேசினேன். நிறைய படங்கள் பார்த்தேன். பொதுமக்கள் வக்கீலை எப்படிப் பார்க்கிறார்கள் உள்ளிட்ட சில கேள்விகளை இந்தப் படத்தில் முன்வைத்துள்ளேன். அது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

நான் ஒரு வட இந்திய பெண் என்று யாருமே யோசிப்பதில்லை. வசனங்களாக எழுதிக் கொடுக்கிறார்கள். 35 பக்கம் கொண்ட புத்தகத்தை தினமும் இயக்குநர் ப்ரட்ரிக் கையில் பார்க்கலாம்.

காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 2 பேர் பேசிக் கொண்டே இருபப்தை படமாக்கிக் கொண்டிருப்பார். அவ்வளவு வசனங்கள் பேசியிருக்கிறோம். பாக்யராஜ் சார், பார்த்திபன் சார் இருவரும் ஒரு முறை படித்துவிட்டு பேசிவிடுவார்கள். ஆனால், நான் 3 மாதங்களுக்கு முன்பே முழுக்கதையையும் வாங்கி என் வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து பேசியுள்ளேன். முக்கியமாக இந்தப் படத்துக்கு நானே டப்பிங் செய்துள்ளேன். படப்பிடிப்பு வந்து பேப்பர் பார்த்து என்னால் வசனம் பேசி நடித்திருக்க முடியாது.

இப்போது எப்படி சிவாஜி சார், பாக்யராஜ் படங்கள் குறித்து பேசுகிறோமோ அப்படி 20 ஆண்டுகள் கழித்து சில படங்கள் குறித்து பேச வேண்டும். அதை மனதில் கொண்டே படங்கள் ஒப்புக் கொள்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது. ஆனால் எனது பயணம் இதே வெளியில் தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது நிறைய வலுவான கதைகள் வருகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகும் கூட 3 கதைகள் தேர்வு செய்து வைத்துள்ளேன். என் படங்களை பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும். பெண் கதாபாத்திரத்தை மையாக வைத்து நான் நடித்த படங்கள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டது தான்.

நான் இப்போது எல்லாம் ஒரு ஹீரோவாக உணர்கிறேன். இந்தாண்டு எனக்கு 41 வயது ஆகிறது. 41 வயதில் ஹீரோவாக உணர்வது அரிதானது என நினைக்கிறேன்.

அனைத்து படங்களிலுமே என் கதாபாத்திரத்தைப் பார்த்து பெண்கள் பெருமையடைய வேண்டும் என நினைக்கிறேன். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஹைலைட் பண்ணி படங்கள் பண்ணவேண்டும். நிறைய ரசிகர்கள் படத்தைப் பார்ப்பார்கள்.

ஆகையால், சமூக அக்கறையுள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறேன். கமர்ஷியல் படங்களில் பாட்டு, காதல் காட்சிகள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி படங்களில் வித்தியாசமான களங்களில் நம்மை காண முடியும்.

நான் கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போது தான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது.

‘பொன்மகள் வந்தாள்’ மாதிரியான படங்கள் எனக்கு வருவதில் மகிழ்ச்சி. நான் எந்தவொரு இயக்குநரிடமும் இந்தமாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்று கேட்கவில்லை. தானாகவே அமைகிறது. கமர்ஷியல் படங்கள் நிறைய வரவில்லை. அப்படி வந்தால் கூட, என் பசங்களை வீட்டில் விட்டுவிட்டு பாட்டு பாட, நடனமாட போக விரும்பவில்லை.

நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே பெண்கள் படங்களிலும் வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நிஜவாழ்க்கையில் நிறைய பணிகளை பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது 2 குழந்தைகளுக்கு தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன்.

அவர்களுக்கு வெறும் அட்வைஸ் மட்டும் செய்யாமல், என் படங்கள் மூலமாக அவர்கள் நான் எப்படி என தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குடும்பப் பெண்ணாக வித்தியாசமான பரிமாணங்களில் காண முடியும். நிஜ வாழ்க்கையில் நான் எப்படியிருக்கிறேனோ, அப்படியே திரையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எங்களுடைய நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்கு சரியாக பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில படங்கள் எந்தளவுக்கு பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொந்த பணத்தையே போட்டு தயாரித்துவிடுகிறோம். ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு நிறைய பெண்களை மையமாக கொண்ட படங்கள் வந்தது. அதை தயாரிப்பது சில பேர் மட்டுமே.

இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள்.

திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும்.

இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பும் நன்மையோ அதை தான் கவனிக்க முடியும். கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் – இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன்.

பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.

சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள்.

வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்.

கரோனா பிரச்சினை முடிவடைந்து அனைவரும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவோம். அதுவரை அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே செல்லும் போது கூட பாதுகாப்பாக மாஸ்க் அணிந்துச் சொல்லுங்கள்.

இந்த தருணத்தில் கூட நமக்காக தொடர்ந்து உழைத்து வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் தலை வணங்குகிறேன். உங்களுடைய அயராத உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. விரைவில் அனைத்தும் சீராக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இது எனது 49-வது படம். அடுத்து வரவுள்ள 50-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவும் உங்களை கண்டிப்பாக மகிழ்விக்கும்.

இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் பத்திரிகை நிருபர்கள், இணையதளம், வானொலி, தொலைகாட்சி உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி. எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர் சூர்யாவுக்கு ஸ்பெஷல் நன்றி.

More Articles
Follows