தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
46 வருடங்களுக்கு முன் 1975 ஆகஸ்ட் 18ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.
கே பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் கமல் ஸ்ரீவித்யா இருவரும் ஜோடியாக நடிக்க கெஸ்ட் ரோலில் நடித்தவர் தான் ரஜினிகாந்த், ரஜினி ரசிகர்கள்
இன்று 46 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் 46YEARSOFRAJINISM என கடந்த ஒரு வாரமாகவே ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
ரஜினியை பற்றி சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே அவரைப் பற்றிய சிறு தொகுப்பு இது..
*1977 -1978 காலகட்டத்தில் வருடத்துக்கு
20 படங்களில் நடித்தவர் இவர்தான்.
*10 வருடங்களில் 100 படங்களில்
நடித்துக் கொடுத்தவர் அவர்தான்.
சிகப்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே சினிமா சான்ஸ் என்பதை மாற்றிய கறுப்பழகர் இவர்தான்.
*ஐந்தே வருடங்களில் எம்.ஜி.ஆரை விட
அதிக சம்பளம் பெற்றவர் இவர்தான்.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க பலர் ரெடியாக இருந்தாலும் வர்த்தக ரீதியான விளம்பரங்களில் நடிக்காதவர் இவர்தான்.
எந்த சூழ்நிலையிலும் யாரையும் புறம் பேசாத நல்ல மனிதர் இவர்தான்.
ஜப்பான் வரைக்கும் தமிழைக்
கொண்டு சேர்த்தவர் இவர்தான்.
தன் சொந்தப் படத்தில் ஏற்பட்ட
நஷ்டத்தை திரும்ப கொடுத்தவர்
இவர்தான்.
இவரைப் பின்பற்றி சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் யாரையும் பின்பற்றாதவர் இவர்தான்.
வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாகி 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை
பிடித்தவர் இவர்தான்.
இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் இவரது நம்பர் 1 இடத்தை தொட முடியாத இடத்தில் வைத்தவரும் இவர்தான்.
நூறாவது படம் ஒரு மாஸ் படமாக
அல்லது ஒரு குடும்ப படமாக
கமர்சியல் படம் நடிக்க வேண்டும்
என்று நினைக்கும் நடிகர்களுக்கு
மத்தியில் தனது ஸ்ரீராகவேந்திரரை
தனது 100வது படமாக தேர்வு செயத துணிச்சலானவர் இவர்தான்.
பாபா படம் சரியாக போகவில்லை
என்று தெரிந்ததும் அதற்கான
நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களுக்கு
திருப்பி தந்தவரும் இவர்தான்.
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவை
மிக முக்கியமான கதாபாத்திரத்தில்
நடிக்க வைததிருந்தலும, சந்திரமுகி
படத்தை இது ரஜினி படம் என்று சொல்ல வைத்தவர் இவர்தான்.
ஒரு வருடம் இரண்டு வருடம் இடைவெளி
ஏற்ப்ப்ட்டு விட்டாலே நடிகர்களுக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் 4 வருடம் இடைவெளிக்குப்பிறகு தனக்கான
இடத்தை கொஞ்சமும் கூட குறையாமல்
தக்க வைத்தவர் இவர்தான்
இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல்வாதிகள் எல்லோரிடம்
நட்பு கொண்டிருந்தவர் இவர்தான்.
தன்னை விமர்சித்தவர்களை கூட
நண்பர்கள் என்று அழைப்பவர் இவர்தான்.
இவரின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து மலேசியா பிரதமர் இவரிடம் செல்பி எடுத்துக் கொண்டார். இன்னொரு நாட்டின் பிரதமர் செல்பி எடுத்துக் கொண்டவர் இவர்தான்.
95 கால கட்டத்தில் அப்போது பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். கட்சியின் தமிழக தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லும்போது எனக்கு வேண்டாம் என்று சொன்னவர் இவர்தான்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியே ரஜினிதான் என மூப்பனாரையே சொல்ல வைத்தவர் இவர்தான்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கு உள்ளதாக சொன்ன காலத்திலும் முதல்வர் பதவி ஆசையில்லை என்று சொன்னவரும் இவர்தான்.
தன் உடல்நிலையால் கட்சி ஆரம்பிக்க முடியாமல் போன போதும் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன்னை நம்பியவர்களை கொரோனா வைரசுக்கு பலிகடா ஆக்க மாட்டேன் என்ற உண்மையை பேசியவரும் இவர்தான்.
அரசியல்வாதிகளே அழகுக்காக அரிதாரம் பூசும் போதும் பொதுவெளியில் வழுக்கை தலை தாடியுடன் வலம் வரும் நடிகரும் இவர்தான்.
இந்திய நாட்டின் பிரதமரே #தலைவா
என்று அழைக்கப்பட்டவரும் இவர்தான்.
#46YEARSOFRAJINISM
தலைவருக்கு வாழ்த்துக்கள்…
#46YEARSOFRAJINISM – A tribute of Super Star Rajinikanth