தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.
அப்போது கமல் பேசியதாவது:-
“50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.
ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு போனாலும் அங்கிருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன.
கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துகளா? என கேட்கிறார்கள். ஆம்… நீங்கள் கொடுத்ததுதான்.
நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது.
நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்வரை நஷ்டம். ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்
நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போல எளிமையாக வாழனும்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிக்கொண்டு வருவேன்.
டாஸ்மாக் வருமானத்தை வைத்து இலவசங்கள் வழங்குகின்றனர்.
மக்கள் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் அஞ்சுவார்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
300 crore loss for me says Kamal Haasan