தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு விருந்தாக தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.
இதனையொட்டி முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உத்தரவிட்டார்.
மேலும் இணையதளம், செல்போன் செயலி ஆகியவை மூலம் தன் புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் ரஜினிகாந்த்.
முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற தலைவராக சோழிங்கர் என்.ரவி நியமிக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மற்ற மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கியமாக விவசாயிகள் மற்றும் பெண்களை அதிகளவு சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ரஜினியின் புதிய கட்சியில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மக்கள் மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடந்துள்ளது.
நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனையடுத்து மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாயிகள் அணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதில் மகளிர் அணியில் சேர ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.