தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘பைரவா’வுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பைரவா’ படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு உருவாகி வருவதால் அதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் பல மடங்கு உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் பைரவா படத்திற்காக 150அடி உயர விஜய் கட்அவுட்டை வைத்துள்ளனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சிறப்பு அனுமதியுடன் இந்த கட்அவுட்டை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சினிமா வரலாற்றிலேயே இந்த அளவு உயரத்திற்கும் எந்த நடிகருக்கும் கட் அவுட் வைத்தது இல்லை என கூறப்படுகிறது.

‘பைரவா’ படத்திற்கு தடை… விஜய்க்கு அடுத்த தலைவலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மை காலமாக தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு, தடை என பல செய்திகள் வெளியாகின்றன.

இதில் விஜய் படங்களுக்கு கூடுதலாகவே எதிர்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த பொருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாய் ஒன்றை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ஒரு அனிமேஷன் கதையை தயாராக வைத்திருக்கிறாராம்.

மேலும் அதை பைரவா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் விஜய் படத்துக்கும் பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ளதால், விஜயா புரொடக்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்காததால், தனது படத் தலைப்பான பைரவாவை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், மனுதாரர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எதிர் மனுதாரரின் கருத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாதென தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் பைரவா படத்தயாரிப்பாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Bairavaa movie title case at High Court

‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் என்றைக்குமே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது ரஜினிதான்.

அவருக்கு அடுத்த இடத்தில் மற்ற நடிகர்கள் மாறி மாறி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கையில் கபாலி படம் கிட்டதட்ட 55 திரையரங்குகளில் வெளியானதாம்.

தற்போது பைரவா படத்திற்கு 52 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாளை பைரவா வெளியாகவுள்ள நிலையில் கபாலியின் எண்ணிக்கையை முந்துவாரா? என்பதை பார்ப்போம்.

Will Bairavaa beat Kabali theatre counts at Srilanka

தமிழர்களின் பவரை காட்டுவோம்.. சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் தாமாவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

நாம் தமிழர்களின் நிறத்தை அவர்களுக்கு காட்டுவோம். உண்மையான தமிழர் என்ன செய்வார்? என்பதை காட்டுவோம்.

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

STR ‏@iam_str 8m8 minutes ago
They have shown us their colour. Now we Tamils will show them our colour & unity. Wait & see what real tamils can do !! #PressMeet shortly .

Simbu going to meet Press Shortly to support Jallikattu

‘பைரவா’ படத்தில் விஜய்யின் மாஸ் சீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை மறுநாள் (ஜனவரி 12) உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை விஜய் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் பக்கா கமர்ஷியலாக உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் பரதன்.

இப்படத்தில் கைதட்டல்களை அள்ளும் பல மாஸ் சீன்கள் இருந்தாலும், ஒரு சீனில் விஜய் பேசும் வசனங்கள் பலத்த வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, தற்போது நாட்டில் நடைபெறும் முக்கியமான சமூக பிரச்சினையை பற்றி விஜய், கோர்ட்டில் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அப்போ… நாளை மறுநாள்முதல் பைரவா நிச்சயம் மாஸ் காட்டுவார் என்று நம்பலாம்.

‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (சிங்கம் 3) படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி முதல் தனது பாய்ச்சலை ஆரம்பிக்கிறது.

இப்படம் வெளியாகும் அன்று பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகக்கூடும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தேதியை வைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பிப்ரவரி 10ஆம் ரிலீஸ் ஆகலாம் எனவும் தெரிவிக்கிறது.

சிவலிங்கா படத்தின் பாடல்கள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows