தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து எனவும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது.? என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது…
பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த 2021 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
10th 11th 12th public exam to cancel in 2021 ?