தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எனவே தமிழக அரசின் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள 1100 மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன.
இதனால் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் சற்றுமுன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டாலும் நஷ்டத்தை கணக்கில் கொண்டு தியேட்டர்களை நாளை முதல் திறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தற்காலிக ஸ்டிரைக் வாபஸ் எனவும் கூறப்படுகிறது.
எனவே நாளைமுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ரூ. 100க்குள் டிக்கெட் கட்டணமிருந்தால் 18% ஜிஎஸ்டியும், ரூ. 100க்கும் மேல் டிக்கெட் இருந்தால் 28% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்பட உள்ளது.
திரையரங்குகளில் டிக்கெட் விலையை நிர்ணயிக்க கமிட்டி ஒன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் மொத்தம் 12 பேர் இருப்பார்கள். அதில் 6 பேர் தமிழக அரசு அதிகாரிகள் மீதி 6 பேர் திரைத்துறையை சார்ந்தவர்கள். திரைத்துறை சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், Hon. செயலாளர் கதிரேசன் , பொருளாளர் எஸ். ஆர். பிரபு , தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் , அருள்பதி ஆகியோர் இடம்பெறுவர்.
இந்த கமிட்டி தமிழக அரசோடு இணைந்து டிக்கெட் கட்டணம் மற்றவையை முடிவு செய்யும்..
1000 cinemas will be opened from tomorrow. Protest against tax additional to GST is cancelled