பிறந்த நாளுக்கே 100வது நாள் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் வெளியாகி 25, 50 மற்றும் 100 நாட்களை கடந்து விட்டால் அதற்கான விழா மற்றும் வெற்றி விழா கொண்டாடுவதை பார்த்து இருப்போம்.

அதுபோல் நடிகர்களிள் பிறந்த நாளுக்கு விழா எடுத்து ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து இருப்போம்.

ஆனால் முதன்முறையாக பிறந்தநாளுக்கு 100வது நாள் விழா எடுத்து இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

என்ன பாஸ்.. புரியலையா..?

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

அந்த நாளுக்கு இன்றிலிருந்து 100 நாட்கள் வரை இடைவெளி உள்ளது.

ஆனால் தற்போதே 100DAYS FOR VIJAY BIRTHDAY என ட்ரண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

கிராபிக்ஸ் டிசைனர்களாக மாறும் சிபிராஜ்-நிகிலா விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கட்டப்பாவ காணோம் திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சிபிராஜ் தன் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

இதில் நாயகியாக சசிகுமாரின் வெற்றிவேல் மற்றும் கிடாரி ஆகிய படங்களில் நடித்த, நிகிலா விமல் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் V.Z துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றிய வினோத் இந்த திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்தை ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து நிகிலா கூறியதாவது…

“நான் முன்பு நடித்த படங்கள் மூலம் என்னை ஒரு கிராமத்து பெண்ணாக தான் ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் முதல் முறையாக நகர கலாச்சாரத்தில் வாழ கூடிய பெண் கதாபாத்திரத்தில் என்னை அவர்கள் இந்த படம் மூலம் காண்பார்கள்.

ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷன் கலைஞர்களாக நானும், சிபிராஜும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றோம்.

சமூதாய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கின்றது” என்றார்.

காஷ்மீரிலும், அதனை தொடர்ந்து பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இதன் சூட்டிங்கை நடத்தவிருக்கிறார்களாம்.

Sibiraj and Nikhila Vimal teams up for first time

திருவெங்காடு சிவன் கோயிலில் தொடங்கிய ‘கூத்தன்’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் படைப்பாக “கூத்தன்” என்ற படத்தை தயாரிக்கிறது.

இதன் தயாரிப்பாளர் திரு. நீல்கிரிஸ் முருகன் அவர்கள் தன்னுடைய மகன் ராஜ்குமார் B.E அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு : மாட்ஸ் DF.Tech, “கூத்தன்” கதை எழுதி இயக்குபவர் வெங்கி.A.L.

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா அரக்கோணம் அருகே உள்ள திருவெங்காடு சிவன் கோவிலில் 12ஆம் தேதி நடந்தது.

இந்தக் கோவில் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நடந்ததற்கு காரணம் இவர்களின் முதல் படைப்பான “கூத்தன்” படக்கதை அந்தக் கோவில் சிவனை தொடர்பு படுத்தியது அதனால் தான் இங்கு நடைபெற்றது.

கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

Koothan movie pooja news updates

பெற்றோர் சொல்லத் தயங்குவதை குழந்தைகளுக்கு சொன்ன ‘நிசப்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்”நாரோ மீடியா ” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இந்நிலையில், மிராக்கிள் பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படமாக தயாரித்த ‘நிசப்தம்’ படத்தினை, எட்டு வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள்.

நிசப்தம் படம் பார்த்த குழந்தைகளும் பெற்றோரும் கண்ணீருடன் வெளியே வந்தனர். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சொல்லத் தயங்கும் பல நல்ல கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த மனிதம் ஃபவுண்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன் நோக்கம் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான விழிப்புணர்வு பெற வைப்பதாகும்.
படம் பார்த்த பின்னர் குழந்தைகள், மனிதம் ஃபவுண்டேசன் அறக்கட்டளையின் லோகோவை அறிமுகப்படுத்தினர்.

அப்போது, நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு நாசர், முதன்மை செயல் இயக்குநர் செல்வி பிரபாலா சுபாஷ் ஆகியோரும், பேபி சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான ஒருங்கிணைப்பினை மக்கள் தொடர்பாளர்களான திரு A. ஜான் மற்றும் திரு யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Nisabdham movie special show for girl kids

சாவித்ரியாக கீர்த்தி நடிக்க; சமந்தாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகா நடி எனவும் பெயரிட்டுள்ளனர்.

அப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானதை பார்த்தோம்.

இதில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.

அவர் சாவித்ரிக்கு கடும் போட்டியாக திகழ்ந்த ஜமுனா ராணி கேரக்டரில் நடிக்கிறாராம்.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Keerthy suresh and Samantha Characters in Savithri biopic movie

குற்றம்23-ஐ தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் டெரர் வில்லனாக நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர் அருண்விஜய்.

இதனையடுத்து அண்மையில் வெளியான குற்றம் 23 படத்தில் ஹீரோவாக நடித்து ரஜினி, ஷங்கர் உள்ளிட்டவர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இந்நிலையில் அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்துள்ளன.

தடையற தாக்க, மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் இந்த வெற்றி மாறன்.

After Kuttram 23 arun vijays confirmed his next project

More Articles
Follows