தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிங்காரச் சென்னை வாலிபர் ஐக்கியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரங்களில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சொல்வதோடு உலக சமாதானத்திற்காக பல்வேறு சமூக நிகழ்வுகளை செய்வது வழக்கம்.
இதில் குறிப்பிடும் படியாக கிறிஸ்மஸ் நாட்களில் அனைவராலும் வரவேற்கப்படும் சாண்டாகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தர்க்கள் பேரணி நடத்துவது விசேஷமான ஒன்று.
இந்தாண்டும் வழக்கம்போல 100 சாண்டாகிளாஸ் கலந்து கொண்ட கலக்கலான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. புதுவாழ்வு ஜெம்ஸ் சபையின் பிஷப் தயானந்தன் இந்த கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணியை குரோம்பேட்டையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்ட சாண்டாகிளாஸ் தாத்தாக்கள் சிங்கார சென்னை வாலிபர் ஐக்கியத்தின் தலைவர் ஐசக்டேனியல் தலைமையில் சென்னை பாடியில் உள்ள சரவணாஸ்டோர்ஸ் துணிக்டையில் ஒன்று திரண்டனர்.
அங்கே பொதுமக்கள் முன்னிலையில் சுமார் ஒரு மணிநேரம் ஆடல் பாடல் நிகழ்சிகள் நடைபெற்றன. அதில் உலக சமாதானத்திற்கான குறுநாடகங்களும் இடம்பெற்றன. முடிவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு காரணமான இயேசுகிறிஸ்து பிறப்புக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஏற்கனவே, சிங்காரசென்னை வாலிபர் ஐக்கியம் சார்பில் 250 சாண்டாகிளாஸ் பேரணி நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
அதேபோல, உலகிலேயே மிக நீளமான பைபிள், மிகச்சிறிய பைபிள் உட்பட பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 Christmas Fathers participated for World Peace show