இளையராஜா 75 நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட பத்து ஹீரோக்கள்

இளையராஜா 75 நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட பத்து ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

10 Heros of Kollywood released Ilayaraja 75 event Teaser 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி “இளையராஜா75” இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

‘இளையராஜா75’ டீசர் பல உருவாக்கப்பட்டது. அதை ஒரே நேரத்தில் விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் tweet செய்து பரவசப்படுத்தினார்கள்.

இவர்கள் தங்களது twitter பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று வீடியோ பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் வரவேற்று பரவசப்படுத்தியுள்ளார்கள்.

இதை ரசிகர்களும் பதிவிறக்கம் செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து பரவசப்படுத்தியுள்ளார்கள்.

அனைவரையும் ஈர்க்கும் விதமாக இன்னும் பல VIPக்கள் வெளியிட உள்ளனர்.

பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள்.

இதை அவர் விழா காண வந்துள்ள ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடை பெறுகிறது.

இந்த இரண்டு நாள் விழாவுக்கான டிக்கெட் நாளுக்கு நாள் வேகமாக விற்பனை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி.

– தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

10 Heros of Kollywood released Ilayaraja 75 event Teaser

துல்கர் சல்மான் படத்தில் நடிகராக டைரக்டர் கௌதம் மேனன்!

துல்கர் சல்மான் படத்தில் நடிகராக டைரக்டர் கௌதம் மேனன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon part of Dulquers 25th film Kannum Kannum Kollaiyadithaalஇது நாள் வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.

தென்னிந்திய இளம் ரசிகர்களின் கனவு நாயகனான நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி இது பற்றி கூறும்போது…

“கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன்.

ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம்.

ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது” என்றார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்பது தற்போதைய இளம் தலைமுறையிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை, அதில் இளைஞர்கள் நடிக்க, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு படம்.

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்க, இந்த படத்தில் KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார்.

தேசிங் பெரியசாமி இயக்க, ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.

Gautham Menon part of Dulquers 25th film Kannum Kannum Kollaiyadithaal

ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணையும் *அலேகா*

ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணையும் *அலேகா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari and Aishwarya Dutta Film Titled Alekaஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை அய்யனார் பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கி வருகிறார்.

கடந்து போன காதல் முதல் நவீன காதல் வரை காதலை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.

தற்போது இப்படத்திற்கு ‘அலேகா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Aari and Aishwarya Dutta Film Titled Aleka

எல்லா புகழும் தலைவர் ரஜினிக்கே…; பேட்ட கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

எல்லா புகழும் தலைவர் ரஜினிக்கே…; பேட்ட கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta success All credit goes Thalaivar Rajini says Karthik Subbarajதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.

படத்தை பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை நெகட்டிவ் கமெண்ட் எதுவும் வரவில்லை என்பதுதான் இங்கே கவனித்தக்கது.

இதனால் ஒட்டுமொத்த பேட்ட படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதுவும் கார்த்திக் சுப்பராஜ் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

இந்த மாபெரும் வெற்றி குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இன்பமான தருணம். எதிர்பார்த்ததை விடவும் பேட்ட படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

பேட்ட படத்தையும் ரஜினியின் நடிப்பையும் பெருமையாக பேசுகிறார்கள். எல்லா புகழும் தலைவர் ரஜினிக்கே” என தெரிவித்துள்ளார்.

Petta success All credit goes Thalaivar Rajini says Karthik Subbaraj

விஜய்சேதுபதியை இயக்கும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான டைரக்டர்

விஜய்சேதுபதியை இயக்கும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time Vijay Sethupathi team up with Director Ponramசிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய 3 படங்களை இயக்கியவர் பொன்ராம்.

அதுதவிர மற்ற படங்களை இவர் இயக்கவில்லை.

இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள ஒரு காமெடி படத்தை பொன்ராம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது.

First time Vijay Sethupathi team up with Director Ponram

அரசியலில் பிரகாஷ்ராஜ்.. கமல் வாழ்த்து; அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

அரசியலில் பிரகாஷ்ராஜ்.. கமல் வாழ்த்து; அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prakash raj met Delhi CM Arvind Kejriwal கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் தமிழில் கே. பாலசந்தரால் டூயட் படத்தில் அறிமுகமானார்.

தற்போது இந்தியாவில் உள்ள பல மொழி படங்களில் நடித்துவிட்டார்.

கடந்த சில மாதங்களாகவே நரேந்திர மோடி அரசையும் பா.ஜ.க,வை கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதன்பின்னர் பெங்களூரு மத்திய தொகுதியில் இருந்து சுயேட்சையாக பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என அறிவித்தார்.

அண்மையில் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல் அவர்களும் பிரகாஷ் ராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜை, தங்கள் கட்சியில் இணைக்க பலர் மோதி வருகின்றனர்.

இந்நிலையில் டில்லி சென்ற பிரகாஷ்ராஜ், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

கெஜ்ரிவால் தனக்கு ஆதரவு தெரிவித்துத்திருந்தார். எனவே அவருக்கு நன்றி சொல்ல அவரை சந்தித்தேன் என பிரகாஷ்ராஜ் இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ளார்.

Actor Prakash raj met Delhi CM Arvind Kejriwal

prakash raj met Arvind Kejriwal

More Articles
Follows