திகிலும் காமெடியும் கலந்த படம் “ மல்லி “

திகிலும் காமெடியும் கலந்த படம் “ மல்லி “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “

ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – PKH தாஸ்

இசை – பஷீர்

பாடல்கள் – சிதம்பரநாதன், பாண்டிதுரை

எடிட்டிங் – B.S.வாசு

நடனம் – நாகேந்திர பிரசாந்த், சுரேஷ்

ஸ்டன்ட் – ஸ்டன்ட் சிவு

தயாரிப்பு – ரேணுகா ஜெகதீஷ்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – வெங்கி நிலா.

படம் பற்றி இயக்குனர் …

பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? – எப்படி? – அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும். முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது என்றார் இயக்குனர் வெங்கி நிலா.

’அடுத்த சாட்டை’யை கழட்டிவிட்ட லிப்ரா ரவீந்திரன்

’அடுத்த சாட்டை’யை கழட்டிவிட்ட லிப்ரா ரவீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Productions and Samuthirakani clash in Adutha Sattai release அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி தயாரித்து நடித்துள்ள படம் அடுத்த சாட்டை.

முதல் பாகத்தை போலேவே இப்படமும் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் பள்ளியில் படித்த மாணவர்கள் இதில் கல்லூரியில் படிப்பதாக உள்ளது.

கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவும், பேராசிரியராக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அதுல்யா ரவி கல்லூரி மாணவியாக இணைந்துள்ளார்.

சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பிரபு திலக்-சமுத்திரக்கனி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவீந்திரன் வாங்கியிருந்தார்.

தற்போது தனக்கும் சமுத்திரக்கனிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபட்டால் ரவீந்திரன் விலகியிருப்பதாக அறிவித்துள்ளார்.

Libra Productions and Samuthirakani clash in Adutha Sattai release

விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் & விஷால் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதனையடுத்து விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே கூறி வந்தது.

ஆனால், திடீரென தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷாவைக் காதலிப்பதாக அறிவித்து அவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயத்தார்த்தமும் செய்துக் கொண்டார் விஷால்.

இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தி உள்ளதாக தகவல்கள வந்த வண்ணம் உள்ளன.

மேலும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை அனீஷாவும் நீக்கியுள்ளதால் இது உறுதி என்கிறார்கள்.

ஆனால் என்ன காரணம்? என்பது இதுவரை தெரியவில்லை.

தன் திருமணத்தை பற்றி கேட்கும்போது எல்லாம் நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் என் திருமணம் நடக்கும் என பல ஆண்டுகளாக கூறி வந்தார்.

ஆனால் தற்போது வரை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இவையில்லாமல் அனிஷாவின் பெற்றோர் நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணத்தை நடக்க சம்மதம் அளிக்கவில்லை எனவும் ஒரு தகவல் வருகிறது.

நிஜமாகவே திருமணம் நின்றதா? என்பது குறித்து இரு தரப்பும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வரலட்சுமி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை இயக்கும் இருமுகன் டைரக்டர்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை இயக்கும் இருமுகன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal to team up with Anand Shankarசுந்தர் சி இயக்கி வரும் ‛ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இப்படம் தற்போது துருக்கியில் படமாக்கப்பட்டு வருகிறது. வில்லனாக வேதாளம் பட புகழ் கபிர் துகான் சிங் நடித்து வருகிறார்.

இதனையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் விக்ரமின் இருமுகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Vishal to team up with Anand Shankar

கார்த்திதான் பர்ஸ்ட்; ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா எல்லாம் நெக்ஸ்ட்!

கார்த்திதான் பர்ஸ்ட்; ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா எல்லாம் நெக்ஸ்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay Ajith Suriya all next to Karthiடேய்.. என்னடா பண்ணி வச்சிருங்கீங்க.. டைட்டிலை பார்த்தா இப்படி கேட்க தோனுதா..? வரோம் பாஸ். வெயிட் பண்னுங்க…

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கியவர் ரஞ்சித். அதன்பின்னர் ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார்.

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் வினோத். அதன்பின்னர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார் வினோத்.

அதுபோல் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவர் அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

அதுபோல் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கினார் சிவா. அதன்பின்னர் தொடர்ந்து அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதற்கு அடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சிவா. இதற்கு அடுத்து ரஜினி படத்தை இயக்கவுள்ளார் சிவா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆக… இயக்குனர்கள் வினோத், ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ் ஆகிய நால்வரும் முதலில் கார்த்தி நடித்த படங்களை தான் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Vijay Ajith Suriya all next to Karthi

தமிழன்தான் ஆளனும்.; ரஜினிக்கு எதிராக விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு.?

தமிழன்தான் ஆளனும்.; ரஜினிக்கு எதிராக விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamizhan must rule Tamilnadu says SA Chandrasekarபிரபல தயாரிப்பாளர், அபிராமி ராமநாதனின், 73வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

இதில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

தமிழன் எங்கிருந்தாலும் அவனுக்கு பெருமை தான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான்.

மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை.

தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார்.

இவரின் பேச்சுக்கு ரஜினிகாந்துக்கு எதிரான கருத்தாக இருக்குமோ? என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி வெளி மாநிலத்தவர் என்பதால் எஸ்ஏசி.யின் இந்த பேச்சு அரசியல் உலகில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Tamizhan must rule Tamilnadu says SA Chandrasekar

More Articles
Follows